
மேற்கு வங்கத்தின் முர்சிபாத் மாவட்டத்தில் இருந்து மூன்றாவது அல்கொய்தா பயங்கரவாதியை தேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
ஷமிம் அன்சாரி என்பவனை ஜலாங்கி என்னும் இடத்தில் உள்ள அவனது வீட்டில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதற்கு முன் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் இருந்து ஒன்பது பயங்கரவாதிகளையும் கேரளாவில் இருந்து மூன்று பயங்கரவாதிகளையும் அதிகாரிகள் கைது செய்தனர்.