
இந்தியாவிற்கு எதிராக சீனா மற்றும் பாக் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக சீனா சுமார் 100
DJI கண்காணிப்பு ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.இந்த ட்ரோன்கள் உதவியுடன் பாக் இந்திய கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா மோதல் காரணமாக இந்திய கடற்படை இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக அளவிலான ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னும் பாகிஸ்தானிற்கு சீனா ட்ரோன்கள் வழங்கியிருந்தாலும் இந்த முறை அதிக அளவில் வழங்கியுள்ளது.