
உத்தராகண்ட் மாநில எல்லையோரம் உள்ள லிபுலெக் பகுதியில் சீனா ஒரு பட்டாலியன் வீரர்களை (800-900 வீரர்கள்) குவித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இந்திய ராணுவம் ஒரு பட்டாலியனுக்கும் அதிகமாக சுமார் 1000 வீரர்களை அந்த பகுதியில் குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து உத்தராகண்ட் மாநில எல்லையோர பகுதிகளில் கடுமையான பதற்றம் நிலவுகிறது.
இன்று இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் இடையே ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.