Breaking News

Day: August 30, 2020

கல்வான் தாக்குதலுக்கு பிறகு தென்சீனக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா

August 30, 2020

கல்வான் தாக்குதலுக்கு பிறகு உடனடியாக இந்தியா தனது முன்னனி போர்க்கப்பல்களை தென்சீனக்கடலுக்கு அனுப்பியுள்ளது.இது குறித்து தனது மகிழ்சியின்மையை சீனா பேச்சுவார்த்தையின் போது இந்திய இராணுவத்திடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2009 முதல் தென்சீனக்கடல் பகுதியில் செயற்கை தீவு அமைத்து அங்கு தனது படை பலத்தை சீனா உயர்த்தி வந்தது.இங்கு இந்தியா போர்க்கப்பல்களை அனுப்பியதற்கு தனது அதிருப்தியை சீனா வெளியிட்டுள்ளது. இதே நேரத்தில் அமெரிக்காவும் தனது கடற்படை போர்க்கப்பல்களை தென்சீனக் கடல் பகுதிக்குள் அனுப்பியிருந்தது.இந்திய கடற்படை இந்த நேரத்தில் […]

Read More

டிசம்பரில் திருமணம் செய்ய வேண்டிய நிலையில் என்கௌன்டரில் வீரமரணம்-வீரரின் சோக வரலாறு

August 30, 2020

காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற என்கௌன்டரில் உத்திரபிரதேசத்தின் முசாபர்நகரை சேர்ந்த 22 வயதான இராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.கடந்த 2017ல் தான் அவர் இராஷ்டீரிய ரைபிள்சில் இணைந்தார். என்கௌன்டரின் போது படுகாயமடைந்த இராணுவ வீரர் பிரசாந்த் மருத்துவமனையில் வீரமரணம் அடைந்தார். இராணுவ வீரர் பிரசாந்திற்கு வரும் டிசம்பர் 6ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வீரவணக்கம்

Read More

48 மணி நேரத்தில் 10 பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்திய வீரர்கள்

August 30, 2020

தற்போது ஸ்ரீநகரின் பந்தசோக் பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.இந்த சண்டையில் காஷ்மீர் காவல்துறை வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்துள்ளார்.இது கடந்த 48 மணி நேரத்தில் மூன்றாவது என்கௌன்டர் ஆகும். நேற்று புல்வாமாவில் நடைபெற்ற என்கௌன்டரில் இந்திய பாதுகாப்பு படைகள் மூன்று பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தினர்.இது கடந்த 48 மணி நேரத்தில் இரண்டாவது என்கௌன்டர் ஆகும். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜதுரா கிராமத்தில் இரண்டாவது என்கௌன்டர் நடைபெற்றது. இதற்கு […]

Read More