தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுப் பகுதியில் சீனாவின் குண்டுவீசு விமானங்கள் இருப்பது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என வியட்நாமின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மற்ற நாடுகள் கொரானா வைரசுடன் போராடி வரும் வேளையில் சீனா தென்சீனக் கடல் பகுதியில் இராணுவ பலத்தை அதிகரித்து போர்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.தவிர தென்சீனக் கடல் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளிடமும் எல்லைப் பிரச்சனையில் உள்ளது. சீனா ஆயுதங்களையும் ,குண்டுவீசு விமானங்களையும் அனுப்புவது வியட்நாமின் இறையாண்மைக்கு எதிராக […]
Read Moreகுளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய காத்திருப்பார்கள்.இதற்காக காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு உளவு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற 12 பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத குழு இரு குழுக்களாக பிரிந்து எல்லைக்குள் நுழைய முயற்சி செய்து வருவதாக உளவுத் தகவல்கள் பறந்துள்ளன. இவர்களுக்கு உதவ பாக்கின் பேட் பயங்கரவாத படை இந்திய பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. ராஜோரியின் பிம்பர் காலி […]
Read Moreஅமெரிக்காவின் மேரிலேன்டில் கடற்படை வான்பிரிவு தளத்தில் உள்ள தரையை அடிப்படையாக கொண்ட ஸ்கை ஜம்ப் அமைப்பில் இருந்து போயிங் நிறுவனம் F/A-18E/F Super Hornet விமானத்தை சோதனை செய்துள்ளது.விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் போன்ற short take-off but arrested recovery configured (STOBAR) அமைப்பு கொண்ட விமானம் தாங்கி கப்பலில் இருந்து ஹார்னெட் விமானங்களை இயக்கலாம் என்பதை இந்திய கடற்படைக்கு காட்ட போயிங் நிறுவனம் இந்த சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய கப்பல்களில் இருந்து வண்ணம் […]
Read Moreதுறைமுக சோதனைகளை விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் வெற்றிகரமாக முடித்துள்ளது.பேசின் சோதனைகள் வரும் செப்டம்பரில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பேசின் சோதனைகளுக்கு பிறகு கடற்சோதனைகள் தொடங்கும்.அனைத்தும் முடிந்து விக்ராந்த் 2023 வாக்கில் படையில் இணைய உள்ளது. 262மீ நீளமுள்ள விக்ராந்த் கட்டுமானம் 2009ல் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது.இதில் 26 விமானங்களும் 10 வானூர்திகளும் இயக்க முடியும்.மிக்-29கே விமானங்கள் தான் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. பேசின் சோதனைகளை கொரானா காரணமாக தாமதமாகி வருகின்றது.பேசின் சோதனையின் போது […]
Read Moreஇந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் பட்சத்தில் முழுதும் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் இந்திய இராணுவத்தால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. பினாகா ராக்கெட் தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டுகளை தயாரித்துள்ளது.இனி இராணுவம் தேவைக்காக ஆர்டினன்ஸ் தொழிற்சாலையை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை. கடைசி சோதனையாக ஆறு பினாகா ராக்கெட்டுகள் சோதனை செய்யப்பட்டன.இந்த ராக்கெட்டுகள் Economic Explosives Ltd (EEL) ஆல் தயாரிக்கப்பட்டுள்ளது.இராணுவத்திற்கு இந்த ரக ராக்கெட்டுகள் அதிக அளவில் தேவையாக […]
Read Moreஎல்லை தொடர்பாக இந்திய சீனா பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஏழு சீனத் தளங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அருணாச்சல் முதல் லடாக் வரை உள்ள இந்த ஏழு தளங்களிலும் சீனா விமானப்படையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள். ஹோடன்,கார் குன்சா,காஷ்கர்,ஹோப்பிங்,ட்கோன்கா ஷோங்,லின்ஷி மற்றும் பங்கத் ஆகிய தளங்களை தொடர்ந்து கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா இந்த தளங்களை மேம்படுத்தி வருகிறது.கடினமான ஷெல்டர்கள், ஓடு பாதையின் நீளத்தை […]
Read Moreபாரத் போர்ஜ் நிறுவனம் மேம்படுத்தியுள்ள நான்கு ஆர்டில்லரி துப்பாக்கிகளில் ஒன்று தற்போது இந்திய இராணுவத்திடம் கடைசி கட்ட சோதனைகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் இவற்றை இந்திய இராணுவத்திற்கு விற்க உள்ளதாக பாரத் போர்ஜ் நிறுவனத்தின் துணை இயக்குநர் அமித் கல்யானி அவர்கள் கூறியுள்ளார். தற்போது இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படாத ஆயுதங்கள் என 101 ஆயுதங்களின் லிஸ்டை வெளியிட்டது.அதில் ஆர்டில்லரிகள்,இழுவை ஆர்டில்லரிகள் ஆகியவையும் அடக்கம். Bharat 52 என […]
Read Moreபாரமுல்லாவில் முக்கிய லஷ்கர் கமாண்டரை வீரர்கள் வீழ்த்திய பிறகு தற்போது ஹேன்ட்வாரா பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் முக்கிய லஷ்கர் கமாண்டரை வீரர்கள் போட்டுத்தள்ளியுள்ளனர். ஹேண்ட்வாராவின் கனிபோரா க்ரால்குண்ட் பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் நாசிர் உடின் என்ற லஷ்கர் கமாண்டர் வீழ்த்தப்பட்டுள்ளான். ஆறு சிஆர்பிஎப் வீரர்களை கொன்றமைக்காக தேடப்பட்டு வந்த நாசிரை தற்போது பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளனர். தற்போது வரை இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
Read More