Day: August 17, 2020

சிஆர்பிஎப் கேம்ப் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

August 17, 2020

குல்கம் மாவட்டத்தின் நெகாமா என்னுமிடத்தில் உள்ள சிஆர்பிஎப் கேம்பில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் காயமடைந்துள்ளார். கேம்ப் வெளியே உள்ள பங்கரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது அந்த மொத்த பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Read More

மோடி-அபே சந்திப்பு ; முக்கிய இராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

August 17, 2020

இந்தியா-ஜப்பான் நாட்டு பிரதமர்கள் அடுத்த மாதம் சந்திக்க உள்ளனர்.இந்த சந்திப்பின் போது முக்கிய இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே சந்தித்து பேச உள்ளனர்.இந்த சந்திப்பின் போது முக்கிய logistic pact, Acquisition and Cross Servicing Agreement (ACSA) என்ற ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கும் தேதி இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.அக்டோபரில் இரு […]

Read More

முக்கிய லஷ்கர் கமாண்டரை போட்டு தள்ளிய வீரர்கள்

August 17, 2020

பாரமுல்லாவில் நடைபெற்ற என்கௌன்டரில் முக்கிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியான சஜ்ஜாத் என்பவனை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். திங்கள் அன்று காலை ரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் உட்சபட்ச உயிர்தியாகம் செய்தனர்.இந்த தாக்குதலுக்கு பழிதீர்க்க வீரர்கள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் முக்கிய பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.அவனிடமிருந்து ஏகே ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

Read More

வீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்

August 17, 2020

பாரமுல்லா மாவட்டத்தின் க்ரீரி பகுதியில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் போட்டுத்தள்ளியுள்ளனர். ரோந்து சென்ற வீரர்கள் மீது இந்த பயங்கரவாதிகள் தாக்கியதில் இரு சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு காஷ்மீர் காவல் துறை வீரர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடந்த பிறகு சிஆர்பிஎப்,இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல்துறை இணைந்த படைப்பிரிவு தேடுதல் வேட்டையை தொடங்கியது. பயங்கரவாதிகளை வெற்றிகரமாக கண்டடைந்த வீரர்கள் அதன் பிறகு நடைபெற்ற என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர்.

Read More

பயங்கரவாத தாக்குதல்; மூன்று வீரர்கள் வீரமரணம்

August 17, 2020

ரோந்து பணியில் ஈடுபட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில் இரு சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.காஷ்மீர் காவல்துறை வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்துள்ளார். காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் கிரீரி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது அந்த மொத்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Read More

கல்வான் தாக்குதலில் காயமடைந்த வீரர் வீரமரணம்

August 17, 2020

ஜீனில் லடாக்கில் சீனப்படைகளுடன் நடந்த மோதலில் காயமடைந்த வீரர்களுள் 41வயதான ஹவில்தார் பிஷான் சிங் அவர்களும் ஒருவர்.தற்போது அவர் வீரமரணம் அடைந்துள்ளார்.அவரது திருவுடல் அவரது சொந்த மாநிலமான உத்ரகன்டின் நைனிடால் மாவட்டத்தில் ஹால்த்வானின் என்னுமிடத்தில் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவர் இந்த வருட ஆகஸ்டு 31ல் படையில் இருந்து ஓய்வு பெற இருந்தவர் ஆவர்.அவருக்கு மனைவியும் 19 வயதில் ஒரு மகனும் 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். லேயில் உள்ள இராணுவ மருத்துவமனையில் […]

Read More