ஹவில்தார் அலோக் குமார் துபே,மேஜர் அனில் அர்ஸ் மற்றும் லெப் கலோ கிரிஷன் சிங் ராவத் ஆகிய வீரர்களுக்கு சௌரிய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவில்தார் அலோக் குமார் ஜீலை 2,1984ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் உள்ள பருக்காபாத்தின் பட்புராவில் பிறந்தவர் ஹவில்தார் அலோக் ஆவார்.படிப்பை முடித்து ஜனவரி 20,2002ல் இராணுவத்தில் இணைந்தார்.பயிறச்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 23வது இராஜ்புத் படைப் பிரிவில் இணைந்தார். 2017, ஜனவரி 6 அன்று 44வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படைக்கு சென்றார்.அங்கு அவரின் […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் காவல்துறையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 2 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர், 3 காவலர்கள் கடுமையான காயங்களுடன் ஶ்ரீநகர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த காவலர்களின் பெயர்களாவன; 1) அஷ்ரஃப்2) இஷ்ஃபக் அயூப்3) ஃபயாஸ்
Read Moreஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயேத் அவர்கள் வெள்ளியன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை அழைத்து இஸ்ரேலுடன் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள உறவு குறித்து விளக்கியுள்ளார். எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு பிறகு இஸ்ரேலை அங்கீகரிக்கும் மூன்றாவது முஸ்லிம் அரபு நாடாக அமீரகம் உள்ளது.அமெரிக்கா தலைமையில் இந்த விசயம் சாத்தியமாகியுள்ளது. இந்தியா இந்த இரு நாடுகளுகளுடனும் நல்ல உறவை பேணி வருகிறது.எனவே இந்த இரு நாடுகளும் இணைவது நல்ல செய்தியே என இந்தியா […]
Read Moreநமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) பல்வேறு ஆயுத தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட ATAGS பிரங்கி ராணுவத்தின் தரம் மற்றும் கள சோதனைகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து சுமார் 150 ATAGS பிரங்கிகளை இந்திய தரைப்படைக்கு வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 155/52 காலிபர் கொண்ட இந்த பிரங்கிகளின் ஒப்பந்த மதிப்பு சுமார் 3,364.78 கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிநவீன இழுவை ஆர்டில்லரி அமைப்பு எனப்படும் […]
Read Moreகாஷ்மீர் விவகாரத்தில் இந்திய நிலைபாட்டை கண்டிக்காவிட்டால் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவோம் எனவும், தனது கருத்தை ஒத்த வேறு நாடுகளையும் பிரித்து அணி சேர்த்து கொண்டு புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம் எனவும் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. இதனையடுத்து சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கான எண்ணெய் சப்ளையை நிறுத்தியதோடு வழங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த வற்புறுத்தி வருகிறது. இதனையடுத்து சவுதி மற்றும் பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவ தளபதி […]
Read Moreநாளை நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தோ திபெத் எல்லை காவல்படையின் 27 வீீரர்களுக்கு வீரதீர விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 21 வீரர்கள் கல்வானில் இந்திய ராணுவ வீரர்களுடன் தோளோடு தோள் நின்று சீன வீீரர்களுடன் சண்டையிட்டவர்கள். சுமார் 20மணி நேரம் வரை சண்டையிட்டு காயமடைந்த ராணுவ வீரர்களை மீட்டு வந்ததோடு மட்டுமின்றி சிறிதளவு காயங்களையே சந்தித்தனர். 6 வீரர்கள் சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுடன் சண்டையிட்டதற்காக வீரதீர விருதுகளுக்கு பரிந்துரை […]
Read Moreமத்திய கிழக்கில் பதற்றங்களை குறைக்கும் வகையில் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தம் நிறைவேறி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையேயான சுமார் 72 ஆண்டு கால பகையுணர்வு நேற்றுடன் மறைந்துள்ளது. இதன்படி இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான அரசாங்க உறவுகள் துவங்கப்பட உள்ளது, மேலும் இரு நாடுகள் இடையே நேரடி விமான போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட உள்ளது. மருத்துவம், பாதுகாப்பு, சுற்றுலா, எரிசக்தி, தகவல் தொடர்பு ஆகிய […]
Read Moreபாகிஸ்தானுடைய பிரதான துறைமுக நகரம் கராச்சி ஆகும், இங்கு தான் பாகிஸ்தான் கடற்படை தளமும் உள்ளது. சமீப காலமாக பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே நெருக்கம் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த நிலையில் SEA GUARDIAN 2020 எனும் கடற்படை பயிற்சிக்காக பாகிஸ்தான் மற்றும் சீன கடற்படைகள் கராச்சி அருகே குவிந்துள்ளன. Shadow Break International எனும் தனியார் கண்காணிப்பு நிறுவனம் செயற்கைகோள் மூலமாக சில புகைப்படங்களை எடுத்தது. அதில் பாகிஸ்தான் கடற்படையின் […]
Read Moreஅமெரிக்க இராணுவத்தின் இந்தோ பசிபிக் கமாண்ட் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது.விட்மேன் தளத்தில் உள்ள 509வது குண்டுவீசு பிரிவில் உள்ள மூன்று பி-2 ஸ்டீல்த் குண்டுவீசு விமானங்கள் தற்போது இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2 பில்லியன் டாலர்கள் விலையுடைய இந்த பி-2 விமானம் அமெரிக்க விமானப்படையிலேயே அதிநவீன குண்டுவீசு விமானமாக உள்ளது. 1980களில் தயாரிக்கப்பட்ட இந்த பி-2 விமானங்கள் சோவியத் மீது அணுஆயுதங்கள் வீச மேம்படுத்தப்பட்டது.ஸ்டீல்த் தொழில்நுட்பம் காரணமாக இந்த விமானம் எதிரிகளின் […]
Read Moreஇந்தியாவினுடைய எந்த தாக்குதலுக்கும் பாக் இராணுவம் தயாராக உள்ளதாகவும் இந்தியாவினுடைய ரபேல் விமானங்களை பார்த்து பயமில்லை என பாக் இராணுவ செய்தி பிரிவு கூறியுள்ளது. பாக் ஐஎஸ்பிஆர் டிரேக்டர் ஜெனரல் பாபர் இப்திகார் பேசுகையில் இந்தியா சமீபத்தில் பெற்ற ரபேல் விமானங்களால் பாக் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என கூறியுள்ளார். ஐந்து வாங்கினாலும் சரி 500 வாங்கினாலும் சரி நாங்கள் எதற்கும் தயாராகவே உள்ளோம் என அவர் பேசியுள்ளார்.
Read More