Day: August 5, 2020

சோதனையில் சீனாவின் முதல் டைப் 075 போர்க்கப்பல்

August 5, 2020

கடந்த 2011ல் தான் சீனா அதிகாரப்பூர்வமாக டைப்075 கப்பல் கட்டுமானத்திற்கான பணிகளை தொடங்கியது.ஹெலிகாப்டர் லேண்டிங் டோக் எனப்படும் இந்த கப்பல் 30000டன்கள் எடையுடையது.அதாவது ஒரு சிறிய விமானம் தாங்கி கப்பல் போன்றது.சீனா தனது நீர்நில தாக்கும் படைப்பிரிவின் பலத்தை அதிகரித்து வருகிறது. 28 வானூர்திகள் வரை இந்த கப்பலில் இயக்க முடியும்.அமெரிக்க கடற்படையின் எல்எச்ஏ கப்பலை விட சிறியதாகவும் பிரான்ஸ் நாட்டு இதே ரக கப்பலை விட சிறிது பெரிதாகவும் சீனா இந்த கப்பலை கட்டி வருகிறது. […]

Read More

ஆஃப்கானிஸ்தான் சிறைச்சாலை மீது ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதல் கேரள மருத்துவருக்கு தொடர்பு !!

August 5, 2020

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஃப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாண தலைநகர் ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலை மீது தாக்குதல் நடைபெற்றது. ஐ.எஸ் இயக்கம் நடத்திய இந்த மோசமான தாக்குதலில் சுமார் 29 பேர் உயிரிழந்தனர், 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தற்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த தாக்குதலில் நமது நாட்டின் கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக ஆஃப்கானிஸ்தான் அரசு கூறியுள்ளது. கேரள மாநிலம் காஸர்கோடு மாவட்டம் பத்னே பகுதியை சேர்ந்தவன் கலுக்கெட்டிய புரையில் இஜாஸ், மருத்துவரான […]

Read More

ஆஃப்கானிஸ்தான் நாட்டில் ஐ.எஸ் இயக்கம் நடத்திய மோசமான பயங்கரவாத தாக்குதல் !!

August 5, 2020

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் உள்ள சிறைச்சாலை மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல் நடைபெற்றது. முதலில் ஒரு கார் வெடிகுண்டு மூலமாக ஒரு பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதலை சிறைச்சாலை வாயில் மீது நிகழ்த்தினான். அதன் பின்னர் பல பயங்கரவாதிகள் சிறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். தங்களது சக உறுப்பினர்களை விடுவிக்கவே ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர், இதில் பல சிறை கைதிகள் தப்பி ஒடினர். சிறிது நேரம் கழித்து பாதுகாப்பு […]

Read More

பெய்ரூட் வெடிப்பு காரணம் என்ன ?? பாதிப்பு எத்தகையது ?? ஒர் பார்வை !!

August 5, 2020

நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்து அந்நகரத்தையே உருக்குலைய செய்துள்ளது. தற்போது வரை 78பேர் உயிரிழந்துள்ளனர், 4000த்திற்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர், லெபனானின் முக்கிய அரசியல் கட்சியான கட்டைப்பின் தலைவர் இறந்துள்ளார், லெபனான் பிரதமரிற் மனைவி மற்றும் மகள் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட அதிர்வு சுமார் 24கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உணரப்பட்டுள்ளது. இதில் முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்குள் மட்டுமே 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். […]

Read More

இராணுவ வீரர்களுக்கான கவச வாகனம் ஹம்வியா அல்லது ஸ்ட்ரைக்கரா ?

August 5, 2020

உயர் மலைப்பகுதிகளில் பணிபுரியும் இராணுவ வீரர்களுக்காக கவச வாகனங்கள் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக இராணுவம் உள்நாட்டு டாடா தயாரிப்பு வாகனம் மற்றும் அமெரிக்கத் தயாரிப்பு ஸ்ட்ரைக்கர் அல்லது ஹம்வி கவச வாகனங்களில ஏதேனும் ஒன்றை பெற பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லடாக் போன்ற உயர்மலைப்பகுதிகளில் வீரர்களை பாதுகாப்பாக அனுப்புவதற்கு கவச வாகனங்கள் தேவையாக உள்ளது.இதற்காக இந்த மூன்று வாகனங்களில் ஏதேனும் ஒன்று வாங்குவது பரிசீலிக்கப்பட்டு அதற்கான முடிவு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

Read More

லடாக் மற்றும் குஜராத்தை இணைத்து புதிய மேப்பை வெளியிட்ட பாகிஸ்தான்

August 5, 2020

நேபாளத்தின் வழியை பின்பற்றி பாகிஸ்தான் இந்திய பகுதிகளை இணைத்து புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.காஷ்மீர் மற்றும் லடாக் தவிர்த்து குஜராத்தின் பகுதிகளை இணைத்து புதிய மேப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மட்டுமே இணைத்து தனது பகுதியாக பாக் கூறி வந்தது.தற்போது மொத்த காஷ்மீரையும் தன்னுடையது என கூறி மேப் வெளியிட்டுள்ளது. பாக்கின் வரலாற்றிலேயே இந்த தினத்தை ஒரு முக்கியமான தினம் என பாக் பிரதமர் கூறியுள்ளார்.குஜராத்தின் ஜீனாகத் பகுதியையும் தன்னுடையது என இணைத்து […]

Read More