Breaking News

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை வீழ்த்திய பாதுகாப்பு படையினர்; 3 வீரர்கள் காயம் !!

  • Tamil Defense
  • July 5, 2020
  • Comments Off on காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை வீழ்த்திய பாதுகாப்பு படையினர்; 3 வீரர்கள் காயம் !!

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள அர்ரேஹ் எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகளுடன் மோதல் வெடித்தது, இருப்பினும் ராணுவம் சரணடைய வாய்ப்பு கொடுத்தும் பயங்கரவாதிகள் மறுத்து விட்டனர்.

இதன் பிறகு தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த சண்டையில் காயமடைந்த 3 வீரர்களும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.