அதிரடி காலை -சோபியானில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • July 18, 2020
  • Comments Off on அதிரடி காலை -சோபியானில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

ஆபரேசன் அம்ஷிபோரா என்னும் பெயரில் வீரர்கள் சோபியினில் நடத்தி வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் இருந்த ஒற்றை வீட்டில் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத் தகவல்கள் வீரர்களுக்கு கிடைத்துள்ளது.வீரர்கள் ஆபரேசனை தொடங்கி அந்த வீட்டை சுற்றி வளைத்த போது பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

அதன் பிறகு வீரர்கள் சுதாரித்துகொண்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.இதில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.