காஷ்மீரின் புல்வாமாவில் ராணுவம் அதிரடி, ஜெய்ஷ் இயக்கத்தின் பதுங்குமிடம் அழிப்பு !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் பதுங்குமிடம் அழிக்கப்பட்டு உள்ளது.

கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்திய தரைப்படையின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ், மத்திய ரிசர்வ் காவல்படை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி படையினர் ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ட்ரால் மாவட்டம் சின்ஃபாடி மச்சாமாவில் உள்ள காடுகளில் தீவிர தேடுதல் வேட்டையின் போது ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு சரிவு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த, 8×8 அளவுள்ள 5 அடி உயரம் கொண்ட பதுங்குமிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.

இந்த பதுங்குமிடத்தில் சட்டத்திற்கு புறம்பான சில பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணைக்காக காவல்துறையால் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

ட்ரால் மாவட்ட காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.