இந்திய அரசு நேபாள அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் இந்திய பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைபவர்களை தடுத்து நிறுத்த கேட்டு கொண்டுள்ளது.
நேபாள அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கலாபனி, லிபுலெக், லிம்பியமதுரா மற்றும் குன்ஜி ஆகிய பகுதிகளில் நேபாள மக்கள் அத்துமீறி நுழைவதாகவும்,
அவர்களை நேபாள அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இந்திய பகுதிகளுக்குள் நுழைய கூடாது என அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.