
எல்லைப் பாதுகாப்பு படை,மத்திய ரிசர்வ் காவல் படை,சஷாஸ்திர சீம பால் ஆகிய படைப் பிரிவுகள் திருநங்கைகளை படைகளில் துணை கமாண்டர்கள் அளவில் அதிகாரிகளாக படையில் இணைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளன.
இது குறித்து பேசிய இந்தோ திபத் எல்லைப் படை தலைவர் தேஸ்வால் ” படையில் திருநங்கைகள் இணைக்க எந்த தடையுமில்லை” என கூறியுள்ளார்.மத்திய தொழிலக காவல் படை இது குறித்து தனது பதிலை சில நாட்களில் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.