ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் பிம்பர் காலி செக்டாரில் சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.
உடனே அப்பகுதிக்கு விரைந்த வீரர்கள், இன்று காலை 5.55மணிக்கு சுமார் 400மீட்டர் உள்நுழைந்த பயங்கரவாதிகளை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், அவர்களை மடக்கினர்.
அப்போது நடைபெற்ற சண்டையில் 1 பயங்கரவாதி கொல்லப்பட்டான், பதுங்கி இருக்கும் மற்ற பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.