கலோ சந்தோஷ் அவர்களின் மனைவி சந்தோஷி அவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் துணை கலெக்டராக பதவியேற்றார்.அதற்காக ஆணையை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் அவர்கள் வழங்கினார்.
ஹைதரபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் ஓரிடத்தில் பணியமர்த்தப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தவிர 10 கோடி ரூபாய் அளவிலான வீடு மற்றும் 5கோடி நிதியும் கலோனல் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
16வது பீகார் ரெஜிமென்ட் பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரியாக இருந்த கலோனல் சந்தோஷ் அவர்கள் சீன எல்லையில் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்தார்.
நாட்டு மக்கள் இருக்கிறார்கள் எனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள என நினைத்து தான் ஒவ்வொரு வீரரும் எல்லையில் உயிர்த்தியாகம் செய்கின்றனர்.அதை உறுதி செய்த தெலுங்கானா மாநில முதல்வருக்கு நமது பக்கத்தின் சார்பாக ஒரு ராயல் சல்யூட்..