செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை ஏவியதாக இரஷ்யா மீது குற்றச்சாட்டு

  • Tamil Defense
  • July 25, 2020
  • Comments Off on செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை ஏவியதாக இரஷ்யா மீது குற்றச்சாட்டு

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இரஷ்யா செயற்கைகோள் ஏவுகணை ஏவியதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன.இந்த குற்றச்சாட்டை இரஷ்யா மறுத்துள்ளது.இரஷ்யா ஒரு செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை ஏவியதாக அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் குற்றச்சாட்டு எழுப்பியது.

குற்றச்சாட்டை இரஷ்யா மறுத்தாலும் தங்களிடம் ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

2018ல் கூட இதே போல ஒரு குற்றச்சாட்டை இரஷ்யா மீது முன்வைத்தது அமெரிக்கா.

இது போன்ற சோதனைகளை இரஷ்யா முன்னெடுப்பதை எதிர்காலத்தில் குறைக்க வேண்டும் என இங்கிலாந்து கூறியுள்ளது.