சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் பாகிஸ்தான் உயிரியல் போர் திறன்களை பெற சீனா உதவக வருவது தெரிய வந்துள்ளது. இதற்காக இரு நாடுகளும் மூன்று வருட ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளன, இந்த ஆய்வில் கொடிய ஆந்தராக்ஸ் வைரஸ் உள்ளிட்டவை ஆய்வு செய்யபட்டு வருகின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் சீனாவின் பிரசித்தி பெற்ற வூஹான் ஆய்வகமும் தான் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஒட்டுமொத்த செலவையும் சீனா ஏற்று கொண்டுள்ளது […]
Read Moreஅமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி என உலக நாடுகள் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் பின்னால் அணிவகுத்து நிற்கும் நேரத்தில் சீனாவின் எந்த முயற்சியும் அந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவாக அமையும். இந்த உறுதிப்படுத்திய இரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா எல்லையில் இருந்து சீனா முழுவதும் பின்வாங்காத நிலையில் சீனாவுடன் எந்த பிசினசும் இல்லை என உறுதிபட கூறியுள்ளார். சீனா இன்னும் 40000 முதல் 60000 வீரர்களை இந்திய எல்லையில் குவித்துள்ளது.பின்வாங்க முடிவெடுத்தும் அதில் எந்த […]
Read Moreபோர் என்று வரும் போது வீரர்களை எல்லைக்கு உடனடியாக அனுப்பவும் போக்குவரத்திற்கும் உதவும் வகையில் உத்ரகண்ட் மாநிலத்தில் சீன எல்லைக்கு அருகே மூன்று வான் ஓடுதளங்களை அமைக்க அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சமோலி,உத்திர காசி மற்றும் பிதோரகர் ஆகிய பகுதிகளில் இந்த ஓடுபாதைகளை அமைக்க வேண்டும் எனவும் இராணுவ மற்றும் மக்கள் பயன்பாடுகளுக்கு இவை உபயோகப்படும் என அவர் கூறியுள்ளார். இந்தியா தொடர்ந்து சீன எல்லையில் கட்டுமானங்களை […]
Read Moreமனிதனால் ஏவப்படக்கூடிய வான் பாதுகாப்ப அமைப்பை மேம்படுத்துவதற்கான பணியை டிஆர்டிஓ தொடங்கியுள்ளது.MANPADS எனப்படும் இந்த அமைப்பை மேம்படுத்துவற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. Dual-band infrared homing seeker அல்லது multi-spectral optical seeker தொழில்நுட்பத்துடன் 25கிகி எடைக்கு சற்று குறைவான இந்த அமைப்பு மேம்படுத்தப்படும். வானில் வரும் இலக்குகளை நோக்கி ஏவப்பட்டு தாக்கி அழிக்க கூடிய இந்த அமைப்பை இரவு மற்றும் பகலில் உபயோகிக்கலாம். 6கிமீ வரை உள்ள வான் இலக்குகளை அழிக்க வல்லது இந்த அமைப்பு. அதி […]
Read Moreகடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய மைவெக்ஸ் 2020 பயிற்சிகள் ஜப்பானுடைய வடக்கு கடல்பகுதியில் நடைபெற்று வருகின்றன. இந்த பயிற்சியில் அமெரிக்க கடற்படையின் கண்ணிவெடி போர்முறை படையணி-7 மற்றும் ஜப்பான் கடற்படையின் கண்ணிவெடி போர்முறை படையணி- 3 ஆகியவை பங்கு பெற்றுள்ளன. இந்த பயிற்சிகளில் கடலில் கண்ணிவெடிகளை வைத்தல், கண்டுபிடித்தல், செயலிழக்க செய்தல்போன்றவற்றை இரு படையணிகளும் கூட்டாக மேற்கொள்ள உள்ளன. இதில் ஜப்பான் சார்பில் 1) ஜே.எஸ். உராகா2) ஜே.எஸ். புங்கோ3) ஜே.எஸ். அவாஜி4) ஜே.எஸ். ஹிராடோ5) […]
Read Moreஅமெரிக்காவில் தங்களது சீன ராணுவ அடையாளங்கள் மற்றும் தொடர்புகளை மறைத்து பணியாற்றி வந்த மூன்று சீன ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இருந்த நான்காவது நபர் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் உள்ள சீன தூதரகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யபட்ட மூன்று பேரும் அமெரிக்கபாதுகாப்பு துறை நிறுவனங்களிலும், மருத்துவ ஆராய்ச்சி கூடங்களிலும் பணியாற்றி வந்துள்ளனர். அமெரிக்க அரசு தரப்பில் சீன அரசு தனது ராணுவ விஞ்ஞானிகள் மற்றும் வீரர்களை அவர்களது அடையாளங்களை மறைத்து அமெரிக்க நிறுவனங்களில் […]
Read Moreரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடின் அவர்களுடைய நேரடி உத்தரவின் பேரில் ரஷ்ய முப்படைகளும் மிகப்பெரிய போர் ஒத்திகையை மேற்கொண்டன. ஜூலை 17 முதல் 21 வரை நடைபெற்ற இப்பயிற்சிகளில், ரஷ்ய தரைப்படையின் தெற்கு மற்றும் ராணுவ மாவட்டங்களின் வீரர்கள், வடக்கு மற்றும் பஸிஃபிக் பிராந்திய கடற்படை பிரிவுகள், மரைன் வீரர்கள் மற்றும் சில விமானப்படை படையணிகளும் பங்கேற்றன. சுமார் 150000 வீரர்கள், 400 விமானங்கள் மற்றும் 100க்கும் அதிகமான கடற்படை கலன்கள் இப்போர் ஒத்திகையில் பங்கு பெற்றன. […]
Read Moreசீன அரசின் மிக முக்கியமான அறிவியல் ஆய்வகம், அணுசக்தி பாதுகாப்பு தொழில்நுட்ப கல்லூரி ஆகும். இது சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹெஃபெய் நகரத்தில் அமைந்துள்ளது, இந்த ஆய்வகம் சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கி வருகிறது. சீனாவின் மிகச்சிறந்த அணு விஞ்ஞானிகள் 600 பேர் இங்கு பணிபுரிந்து வந்தனர், இவர்களில் 80% பேர் முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். இந்த விஞ்ஞானிகள் சுமார் 200க்கும் அதிகமான சர்வதேச மற்றும் தேசிய ஆய்வு திட்டங்களில் பங்கேற்றுள்ளனர். தற்போது இந்த […]
Read Moreசீன மரைன் கோர் படையினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இலகு ரக டாங்கிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள், விமான எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட கனரக தளவாடங்களை பயன்படுத்தினர். இப்பயிற்சிகள் சீன மரைன் கோர் படையினர் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளதை காட்டுகிறது.
Read Moreஇந்திய இஸ்ரேல் நட்புறவில் மற்றுமொரு மைல்கல்லாக அமையும் வகையில் வெறும் 30 நொடிகளில் கொரோனா சோதனை செய்யும் கருவியை இணைந்து கண்டுபிடிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள இஸ்ரேலிய தூதரகம் சிறப்பு விமானம் ஒன்றின் மூலமாக இஸ்ரேலிய ஆய்வுக்குழு தலைநகர் தில்லி வரவுள்ளதாகவும், பின்னர் இந்திய விஞ்ஞானி விஜயராகவன் அவர்களின் குழுவுடன் இணைந்து இக்கருவியை அவர்கள் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. மேலும் சிறப்பு இஸ்ரேலிய மருத்துவ கருவிகள் உபகரணங்கள் இதே […]
Read More