யூனியன் பிரதேசமான காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரால்ஹர் பகுதியில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர். தாஹிர் அகமது சேக் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அவன் காஷ்மீரின் பட்கம் பகுதியை சேர்ந்தவன்.அவனிடமிருந்து ஒரு ஏகே-47,25 ரவுண்டு தோட்டாக்கள் மற்றும் ஒரு கிரேனேடு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Read Moreகிழக்கு லடாக்கில் சீன ராணுவம் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 30,000 இந்திய படையினர் கிழக்கு லடாக்கில் முகாமிட்டு உள்ளனர். இந்த பிரச்சினை முற்றிலுமாக முடிவுக்கு வர சிறிது காலம் ஆகலாம என கூறப்படும் நிலையில், இந்தியா தனது வீரர்களை இப்பிரச்சினை ஒய்ந்தாலும் கூட பின்வாங்க தயாராக இல்லை. ஆகவே இந்தியா தனது படையினருக்கு பல ஆயிரம் கடும் குளிரை தாங்கும் வகையிலான கூடாரங்களை வாங்க அவசர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கிழக்கு லடாக்கில் இனி இந்திய ராணுவம் […]
Read Moreஇந்திய விமானப்படைக்கு 114 பல்திறன் போர்விமானங்களை வாங்குவதற்கான திட்டம் செயலில் உள்ளதை அறிவோம். இதில் அமெரிக்கா சார்பில் ஏற்கனவே போயிங் நிறுவனம் தனது F/A-18 சூப்பர் ஹார்னெட் ப்ளாக் 3 ரக விமானத்தையும், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தனது F21விமானத்தையும் போட்டி களத்தில் இறக்கி இருந்தன. தற்போது இந்திய கடற்படைக்கு F/A-18 சூப்பர் ஹார்னெட் ப்ளாக்3 விமானத்தை போயிங் நிறுவனம் பிரதான படுத்தி உள்ள அதே நேரத்தில் தனது புதிய தயாரிப்பான அதிநவீன F-15EX விமானத்தை இந்திய […]
Read Moreசீனா பாக் எகானாமிக் காரிடர் மற்றும் குவாதர் துறைமுகம் ஆகியவற்றை பாதுகாக்க பாகிஸ்தானிற்கு சீனா தாக்கும் ஆளில்லா விமானங்களை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலுசிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகம் மற்றும் அதனை சார்ந்து பெல்ட் மற்றும் ரோடு இனிசியேட் எனும் திட்டத்தின் கீழ் 60பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதன் அடிப்படையில் சீனா பாகிஸ்தானிற்கு இரண்டு விங் லூங் ட்ரோன் அமைப்புகளை வழங்க உள்ளது (ஒரு அமைப்பில் இரண்டு ட்ரோன்கள் மற்றும் ஒரு தரை கட்டுபாட்டு […]
Read Moreமிக நீண்ட காலமாகவே ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் இந்திய பாதுகாப்பு கொள்முதல் கொள்கையில் இடம்பெற்றிருந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்தியா இந்த ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை வாங்க ஆர்வமாக உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரடேட்டர் எனப்படும் இந்த ட்ரோன் உளவு, கண்காணிப்பு, இலக்குகளை அடையாளம் கண்டுபிடித்தல், தாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. இந்த ட்ரோன்கள் ஈராக், சிரியா, லிபியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பயன்படுத்தபட்டு பல வெற்றிகரமான […]
Read Moreஇந்திய சீன எல்லைப்பிரச்சனைகள் எல்லைச்சாலை கட்டுமானங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்துவிட்டன.தற்போது எல்லைச் சாலைகள் அமைப்பான பிஆர்ஓ-வின் கீழ் வரும் சாலைகளை பராமரிக்க ஏற்கனவே உள்ள பராமரிப்பு செலவை 30 கோடியில் இருந்து 120 கோடியாக அதிகரித்துள்ளது மத்திய அரசு. படைகளை உடனடியாக எல்லைக்கு நகர்த்த இந்த சாலைகள் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.முன்னனியில் உள்ள படைகளுக்கு சப்ளை செய்யவும் இந்த சாலைகள் இன்றியமையாததாக உள்ளது. எல்லை மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.லடாக்கில் ஏற்கனவே […]
Read Moreஇரு நாடுகளின் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஏற்பட்ட நடவடிக்கையாக கல்வான் பகுதியில் இருந்து சீனா தங்களது படைகளை பின்நோக்கி நகர்த்தியுள்ளது.கல்வான் பகுதி,கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங் ஆகிய உரசல் பகுதியில் இருந்து படைவிலக்கம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா குறிப்பிட்டபடி தனது படைகளை விலக்கியுள்ளதா என்பதை இந்தியப் படைகள் ஆராய்ந்து உறுதி படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்ந்தால் கண்டிப்பாக பிரச்சனை எளிதாக தீரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பின்வாங்குதலில் இதுதான் முதல்படி எனவும் முழுவதும் பின்வாங்க இன்னும் […]
Read Moreகல்வானில் ஏற்கனவே மோதல் ஏற்பட்ட பகுதியில் இருந்து சீனத்துருப்புகள் 2கிமீ தூரம் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக சீன அத்துமீறி ஃபபர் ஷோன் பகுதியை ஆக்கிரமித்து பங்கர்கள் மற்றும் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது.தவிர சென்ற மாதம் 15ம் தேதி இரவு நடைபெற்ற கடும் சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதன் பிறகு இரு நாடுகளும் இரு முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் இரு நாடுகளும் பின்வாங்க உறுதி அளித்தன.ஆனால் சீனாவை நம்ப இயலாது […]
Read Moreலடாக்கில் நிலவி வரும் பிரச்சனை குறித்து இந்தியா சீனா ஆகிய நாடுகள் இடையே ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் இதர நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் சீனா இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனது பக்கத்தில் புதிய ராணுவ தளம் ஒன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பாங்காங் ஸோ ஏரியில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் சீனா புதிய ஹெலிகாப்டர் தளம் ஒன்றை கட்டமைத்து வருகிறது. ஏற்கனவே அந்த பகுதியில் […]
Read Moreபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி சமீபத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே நல்ல புரிதல் இருப்பதாகவும், இரு நாடுகளும் ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் குரேஷி வாங் இடம் கூறியதாகவும், மேலும் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எந்த சூழலிலும் இணை பிரியாத நட்பு நாடுகள் எனவும் […]
Read More