
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாக் இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக பாக் இராணுவம் கூறியுள்ளது.
850மீ பாக் எல்லைக்குள் இந்த ட்ரோன் சென்றதாகவும் அதனால் சுட்டு வீழ்த்தியதாகவும் பாக் கூறியுள்ளது.
இது வரை இது போன்ற ஒன்பது ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியுள்ளது.