
காஷ்மீரில் நடைபெற்று வந்த இரு வேறு என்கௌன்டரில் மொத்தமாக நான்கு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.
ஸ்ரீநகர் அருகே நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை இராணுவத்தின் இராஷ்டீரிய ரைபிள்ஸ்,சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல் துறை இணைந்த படைப்பிரிவு வீழ்த்தியது.
அதன் பிறகு சோபியான் அருகே நடத்தப்பட்ட என்கெளன்டரில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.