சோபியானில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

யூனியன் பிரதேசமான காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

பயங்கரவாதிகள் இருப்பிடம் குறித்து இராணுவ வீரர்களுக்கு இரகசிய தகவல்கள் வெளியானதை அடுத்து இராணுவ வீரர்கள் இந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

என்கௌன்டர் தொடங்கிய சில நேரத்திலேயே ஒரு பயங்கரவாதிகளை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

தற்போது வரை ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் 1வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,178வது பட்டாலியன் சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல்துறை SOG வீரர்கள் இந்த ஆபரேசனை நடத்தி முடித்தனர்.