ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில்
250மீட்டர் சர்வதேச எல்லையை தாண்டி ஒரு ட்ரோன் பறந்து கொண்டிருந்ததை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 19ஆவது பட்டாலியனை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர் கண்டனர்.
உடனடியாக அந்து ட்ரோனை அவர்கள் சுட்டு வீழ்த்தினர். பின்னர் ட்ரோனை சோதனை செய்த போது ஒரு எம்4 துப்பாக்கி, அதற்கான 60 தோட்டாக்கள் மற்றும் 7 கையெறி குண்டுகள் அதில் இருந்தது கண்டுபிடிக்க பட்டது.
இதனையடுத்து ட்ரோனையும், ஆயுதங்களையும் வீரர்கள் கைபற்றி சென்றனர்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்ய முயன்றுள்ளதாகவும் அது வெற்றிகரமாக தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.