
இந்த வருடம் மட்டும் காஷ்மீரில் 80 பயங்கயவாதிகளை இராணுவம் வீழ்த்தியுள்ளது.240 பயங்கரவாத உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.
மக்கள் துணையுடன் 22 முக்கிய பயங்கரவாதியையும் இராணுவம் வீழ்த்தியுள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.கடந்த இரு வாரத்தில் மட்டுமே 22 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இராணுவம்,சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல் துறை இணைந்து காஷ்மீரில் அமைதியான சூழலை ஏற்படுத்த உழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மூலச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாத இயக்கங்களில் இணைவதை தடுப்பது முதல் பாக் ஆதரவு பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவுவதை தடுப்பது வரை காஷ்மீரில் பயங்கரவாதத்தை அழிக்க இராணுவப் படைகள் உழைத்து வருகின்றன.