இன்று காலை பாக் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் காணாமல் போன இந்திய தூதரக அதிகாரிகளை ஐ.எஸ்.ஐ கடத்தியுள்ளதாக தெரிகிறது. அதாவது நமது அதிகாரிகள் இருவரும் ஒரு பாகிஸ்தானியரை வாகனத்தில் மோதிவிட்டு தப்ப முயன்றதாகவும் அதனையடுத்து பாக் காவல்துறை அவர்களை கைது செய்துள்ளதாகவும் பாக் தரப்பு கூறியுள்ளது. கடந்த சில நாட்கள் முன்னர் தில்லியில் இரண்டு பாக் தூதரக அதிகாரிகள் (ஐ.எஸ்.ஐ அமைப்பினர்) உளவு நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு நமது தூதரக […]
Read Moreநாட்டின் தலைநகர் தில்லியில் நிலைநிறுத்தப்பட்டு பணியாற்றி வந்த தேசி பாதுகாப்பு படையின் 45 கமாண்டோ வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 இன்டலிஜென்ஸ் பீயுரோ அதிகாரிகளும், 4 இந்தோ திபெத் எல்லை காவல்படை வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Read Moreசனிக்கிழமை அன்று டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே இளம் அதிகாரிகளிடையே உரையாற்றும் போது சில அறிவுரைகளை வழங்கினார். 1) சாதி மதம் குலம் கோத்திரம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு செயலாற்றுங்கள். 2) சிக்கலான நேரங்களில் நம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்னுரை பகுதிரை மனதில் நினைத்து கொள்ளுங்கள். 3) நாடு மற்றும் நாட்டு […]
Read Moreபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் தீடிரென மாயமாகி உள்ளனர். இவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய எந்தவொரு தகலும் தற்போது இல்லை, மேலதிக தகவல்களுக்காக காத்திருக்கிறோம். பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் கண்காணிக்கப்படுவதும், வாகனத்தில் பயணிக்கும் போது பின்தொரப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது என சில நாட்கள் முன்பு பதிவிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. பணிக்கு கிளம்பிச் சென்ற இரண்டு இந்திய சி.ஐ.எஸ்.எஃப் ஓட்டுநர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பணியிடம் சென்று சேரவில்லை […]
Read Moreதனது உயிரை பணயம் வைத்து தனது வீரர்கள் உயிரை மீட்டவர். பள்ளிவயதில் தன் சகாக்களால் ராம்போ என அழைக்கப்பட்டவர். கார்கில் போரின் போது எதிரிகள் கைப்பற்றியிருந்த கார்கில்-லே சாலைக்கு அருகில் அமைந்திருந்த மிக உயரமான மலைப்பகுதியை கைப்பற்ற இவரது ஜம்மு காஷ்மீர் மற்றும் நாகா ரெஜிமென்ட் ,கார்வால் ரைபிள்ஸ் மூன்று பகுதிகளிலிருந்தும் அனுப்பப்பட்டது. எதிரி ஆக்ரோச பலத்துடன் அனைத்து பலத்தயைும் கொண்டு மேலிருந்து படைகள் மீது இடைவிடாத ஆர்டில்லரி தாக்குதல் நடத்திகொண்டிருந்தார்.வீரர்கள் திகைத்தனர்.ஒரு ஆர்டில்லரி ஆறு வீரர்களை தாக்கி […]
Read Moreசீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவை விட அதிக அணுஆயுதங்களை வைத்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. சீனாவிடம் ஏறக்குறைய 320 அணுஏவுகணைகளும் பாகிஸ்தானிடம் 160 ஏவுகணைகளும் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.அதே நேரம் இந்தியா 150 ஏவுகணைகள் வரை வைத்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 2019ன் தொடக்கத்தில் சீனாவிடம் 290 ஏவுகணைகளும் பாக்கிடம் 150-160 ஏவுகணைகளும் இருப்பதாக கணிக்கப்பட்டது.இந்தியாவிடம் 140-150 ஏவுகணைகள் இருப்பதாக கூறப்பட்டது.தற்போது அனைத்து நாடுகளும் தங்களது அணுஆயுத எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. […]
Read Moreவரலாற்றில் முதல் முறையாக இரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டங்களில் பங்கேற்க முப்படைகளை இந்தியா அனுப்புகிறது.வரும் ஜீன் 24 அன்று முப்படைகளும் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் அணிவகுப்பு நடத்தும். கடந்த 2015ல் இந்திய ராணுவம் மட்டுமே இரஷ்யாவின் வெற்றிதின கொண்டாட்டத்தில் பங்கேற்று செஞ்சதுக்கத்தில் அணிவகுத்து சென்றது. 1945 இரண்டாம் உலகப் போரின் போது நாசிக்கள் சரணடைந்ததை நினைவு கூறும் பொருட்டு வருடந்தோறும் மே9 வெற்றி தினமாக இரஷ்யா கொண்டாடி வருகிறது.கொரானா காரணமாக இந்த வருட அணிவகுப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த […]
Read Moreஎல்லையில் நடைபெற்று வரும் பிரச்சனையை இரு நாடுகளும் பேசி தீர்த்து முடிவெடுக்கும் என அமைச்சர் இராஜ்நாத் கூறியுள்ளார்.எனினும் இந்தியா நாட்டின் பெருமைக்கு சமரசம் செய்யும் எந்த முயற்சியும் எடுக்காது எனவும் இந்தியா பலவீனமான நாடு அல்ல எனவும் கூறியுள்ளார். இரு நாடுகளும் டிப்ளோமேட்டிக் மற்றும் இராணுவ முறைகளில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். நம்பிக்கையுடன் நான் கூற முடிந்த ஒரே விசயம் இந்தியா தனது பெருமையை சமரசம் செய்யாது என்பது மட்டுமே என […]
Read More