அமெரிக்கா மற்றும் சீனா இடையே உலகின் தலைமை பீடத்திற்கான அதிகார போட்டி நிலவி வரும் நிலையில் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் சீனாவை ஒடுக்க அமெரிக்கா விரும்புகிறது. இதற்கு இடையே இந்தியாவுடனான எல்லை பிரச்சினை, ஹாங்காங், தைவான போன்ற விஷயங்களை அமெரிக்கா பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது. இந்த நிலையில் இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படை தனது கப்பல்களை அதிகளவில் குவித்துள்ளது. ஒரே நேரத்தில் அமெரிக்க கடற்படையின் இரண்டு விமானந்தாங்கி படையணிகள் சீனாவுக்கு அருகே பணிப்பது சீனாவுக்கு […]
Read Moreவிசாகப்பட்டினம் கடற்படை தளம் இந்திய கடற்படையின் நீர்முழ்கிகள் பிரிவுக்கு தலைமையகமாக செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் ஜூன் 10 அன்று அதிநவீன நீர்மூழ்கிகள் மீட்பு வாகன மையத்தை வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயின் திறந்து வைத்தார். உலகில் 40 நாடுகள் நீர்மூழ்கி கப்பல்களை இயக்கி வருகின்றன ஆனால் அவற்றில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே இத்தகைய நீர்மூழ்கிகள் மீட்பு வசதி உள்ளது. தற்போது இந்தியாவும் இப்பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தில் அதிக ஆழ நீர்மூழ்கி […]
Read Moreடி.எஃப் 10ஏ :1500கிமீ தாக்குதல் வரம்பை கொண்ட இது 500கிலோ எடையிலான வழக்கமான வெடிபோருள் அல்லது அணு அயுதத்தை சுமக்க வல்லது. இதனை கப்பல், விமானம் மற்றும் நீர்மூழ்கிகளில் இருந்து ஏவ முடியும். டி.எஃப் 16:இந்த ஏவுகணைகள் 1000கிலோமீட்டர் வரை தாக்குதல் வரம்பை கொண்டுள்ளன. 500 முதல் 1000கிலோ வரையிலான வழக்கமான வெடிபோருள், அணு ஆயுதங்கள், க்ளஸ்டர் குண்டுகளை சுமக்க வல்லது. ஒன்றுக்கும் மேற்பட்ட குண்டுகளையும் சுமக்கும் வசதியை கொண்டது. டி.எஃப் 21டி:இந்த ஏவுகணைகள் 1700கிலோமீட்டர் தாக்குதல் […]
Read Moreபதான்கோட் நகர காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது ஒரு லாரியில் ஆயுதம் கடத்தி வந்த இருவரை கைது . கைது செய்யப்பட்ட ஆமீர் ஹூசைன் வானி மற்றும் வாசிம் ஹசன் வானி ஆகியோரிடம் இருந்து 2 ஏகே47 ரக துப்பாக்கிகள், 60 கார்ட்ரிட்ஜுகள், 10 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை இவர்கள் பஞ்சாபிலிருந்து காஷ்மீருக்கு கடத்தியது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையின் போது முன்னாள் காஷ்மீர் காவல்துறை காவலர் இஷ்ஃபக் அஹமதுவிடம் இருந்து பெற்று கொள்ளும்படி […]
Read Moreபிஹார் மாநிலத்தின் சீதாமார்ஹி மாவட்டம் நேபாளத்துடனான எல்லையில் அமைந்துள்ளது. சில விவசாயிகள் தங்களது நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு இருந்த நிலையில் தீடிரென நேபாள காவல்துறையினர். அத்துமீறி விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 4 விவசாயிகள் காயமடைந்தனர், 25 வயது கொண்ட நாகேஷ்வர் ராய் எனும் விவசாயி மரணமடைந்துள்ளார். ஏற்கனவே நேபாளம் இந்தியாவுடனான உறவுகளை முறித்து கொள்ளும் நிலைக்கு செல்ல விரும்பும் நிலையில் தற்போது இந்த சம்பவம் பதட்டத்தை அதிகரித்துள்ளது. மத்திய அரசு […]
Read Moreநேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிகளை கொண்டு சுட்டும், மோர்ட்டார்களை கொண்டும் இந்திய நிலைகளை தாக்கியுள்ளனர். இதற்கு இந்திய படையினரும் பதிலடி கொடுத்துள்ளதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreபாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாக் இராணுவத்தின் பத்து இராணுவ நிலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பாக் நடத்திய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். முன்னதாக பாக் நடத்திய தாக்குதலில் இராணுவத்தை சேர்ந்த நாய்க் ஹர்சரண் சிங் வீரமரணம் அடைந்தார்.இதனால் கோபமடைந்த இராணுவ வீரர்கள் பாக்கிற்கு கடுமையான பதிலடியை கொடுத்தனர். ககாவ்லியன் நாலி சம்ஹானி செக்டரில் உள்ள பாக் நிலைகளை நமது வீரர்கள் குறிவைத்து தாக்கினர்.இந்த தாக்குதல்களில் […]
Read Moreகிழக்கு லடாக் பகுதியில் பிரச்சனையை தீர்க்க இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் தற்போது இந்தியா திபத் எல்லையான 4000கிமீ தொலைவிற்கும் சீனா தற்போது தனது படைகளை குவித்துள்ளது.இந்தியாவும் தனது தாக்கும் படைப் பிரிவுகளை ஹிமாச்சல்,உத்தரகண்ட் ,சிக்கிம் மற்றும் அருணாச்சலில் உள்ள முன்னனி நிலைகளுக்கு அனுப்பியுள்ளது. பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் இதுபோன்றதொரு எல்லை மோதலில் தற்போது ஈடுபட்டு வருகின்றன.கிழக்கு லடாக் மற்றும் சிக்கிமின் நாகுலாவில் தொடங்கிய சண்டை தற்போது எல்லை முழுவதிற்கும் விரிந்துள்ளது. இந்தியாவுடன் […]
Read More