லக்ஸம்பர்க் நாட்டை சேர்ந்த க்ளியோஸ் நிறுவனம் இஸ்ரோவின் உதவியோடு தனது செயற்கைகோள்களை காத்திருக்கிறது.
கடந்த ஃபெப்ரவரி மாதம் 20தேதியே ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திற்கு இந்த செயற்கைகோள்களை அனுப்பி விட்டதாக க்ளியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
க்ளியோஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் தென் சீன கடல், ஆஸ்திரேலியா, ஹோர்முஸ் ஜலசந்தி, அமெரிக்காவின் தென் கடலோர பகுதி மற்றும் ஆஃப்ரிக்காவின் மேற்கு, கிழக்கு கடற்கரைகள் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்யும்.
பி.எஸ்.எல்.வி மூலமாக ஏவப்பட இருந்த இந்த செயற்கைகோள்கள் கொரோனா சூழல் காரணமாக தற்போது ஏவப்படவில்லை ஆகவே ஏவுதல் குறித்த இஸ்ரோவின் மறு அறிவிப்புக்கு க்ளியோஸ் நிறுவனம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.