
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் காஷ்மீர் பிரிவு தலைவன் ரியாஸ் நாய்க்கூவை ராணுவம் கொன்ற பிறகு, காஷ்மீரின் 10 முக்கிய பயங்கரவாதிகளை வீழ்த்த ராணுவம் தயாராகி வருகிறது.
அவர்களின் பெயர்கள் தற்போது வெளியாகி உள்ளது.
1) ஸய்ஃபுல்லா
(புதிய ஹிஸ்புல் தலைவன்)
2) மொஹம்மது அஷ்ரஃப் கான்
3)ஜூனையத் செராய்
4)மொஹம்மது அப்பாஸ் ஷேக்
5)ஸாஹீத் சர்கார்
6)ஷாகுர்
7) ஃபய்சல் பாய்
8)ஷெராஸ் அல் லோன்
9)சலீம் பரேய்
10)ஒவாய்ஸ் முல்லிக்
ஆகிய பத்து பயங்கரவாதிகள் ஆவர்.
அதிகாரப்பூர்வ தகவல்கள் படி , ஏப்ரல் மாதத்தில் மட்டும் 28 பயங்கரவாதிகளை ராணுவம் கொன்றுள்ளது, இது கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் எண்ணிக்கையை விட அதிகமாகும் மேலும் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே ஊடுருவ முயன்ற 64 பயங்கரவாதிகளை இந்த வருடம் ராணுவம் வீழ்த்தியுள்ளது.
தூரதிர்ஷ்டவசமாக இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 35 காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.