கிழக்கு லடாக் பகுதியின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவுடனான மோதல் அதிகரித்து வரும் வேளையில் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,ஒருங்கிணைந்த படை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்களுடன் முப்படை தளபதிகளும் மற்றும் ஒருங்கிணைந்த தளபதி அவர்களின் சந்திப்பிற்கு பிறகு இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. ஒரு மணி […]
Read Moreதற்போதைய தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு அவர் சீன படைகளை கையாள்வதில் அனுபவம் வாய்ந்தவர் என பதிவிட்டு இருந்தோம் அது ஏன் என இப்போது பார்க்கலாம், கடந்த 2012ஆம் ஆண்டு மோவ் நகரில் அமைந்துள்ள அதிகாரிகளுக்கான பயிற்சி பள்ளியின் மூத்த பயிற்றுனர்களில் ஒருவராக தற்போதைய தரைப்படை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே பணியாற்றி வந்தார. அப்போது பிரிகேடியர் பதவி வகித்து வந்த அவர் ஒரு அறிக்கை ஒன்றினை தனது பணி […]
Read Moreசீனா மேம்படுத்தியுள்ள புதிய ஆளில்லா வானூர்தியை இந்தியா சீனா எல்லையில் நிலைநிறுத்த உள்ளதாக சீன மீடியா தகவல் வெளியிட்டுள்ளது. AR500C எனப்படும் இந்த ஆளில்லா வானூர்தியால் fire strikes நடத்தவும் மற்றும் இலக்கின் electronic circuitry-ஐ குழப்பவும் முடியும். இந்திய சீன எல்லைப் பிரச்சனை நடந்து வரும் இன்னேரத்தில் இதன் முதல் சோதனை நடந்தேறி உள்ளது. தற்போது நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்தியா தான் காரணம் என சீனா கூறி வருகிறது.இதன் காரணமாக தேவையான நடவடிக்கை என்ற […]
Read Moreஇரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை விமானமான சு-57 விமானம் படையில் இணைக்கப்பட்டதை அடுத்து பாக் டிஏ எனப்படும் புதிய ஸ்டீல்த் குண்டுவீசு விமானத்தை இரஷ்யா மேம்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரஷ்யா தற்போது தனது இராணுவத்தை வேகமான முறையில் நவீனப்படுத்தி வருகிறது. Perspective Aviation Complex for Long-Range Aviation (PAK DA) எனும் திட்டத்தின் கீழ் தற்போது இந்த புதிய குண்டுவீசு விமானத்தை மேம்படுத்தி வருகிறது.இது இரஷ்யாவின் இரண்டாவது ஸ்டீல்த் தொழில்நுட்பம் தொடர்பான தயாரிப்பு ஆகும்.இந்த விமானம் […]
Read Moreஇராணுவத்தின் முக்கிய கட்டளை அதிகாரிகளின் சந்திப்பு வரும் மே 27 முதல் மூன்று நாட்களுக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.லடாக்கில் பிரச்சனை அதிகரித்து வரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாம் கட்ட சந்திப்பு ஜீன் மாத இறுதியில் நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏப்ரலில் இந்த சந்திப்பு நடந்திருக்க வேண்டும் ஆனால் கொரானா காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது. பாக் மற்றும் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்படும் எனத் தெரிகிறது. காஷ்மீரில் தற்போது நடைபெற்று […]
Read Moreஇந்திய இராணுவத்தின் அஸ்ஸாம் ரெஜிமென்டை சேர்ந்த டாடா.1979 அக்டோபர் 2ல் பிறந்தவர்.பின்பு இராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவில் இணைந்து பின்புஇராஷ்டீரிய ரைபிள்சின் 35வதூ பட்டாலியனில் மாறுதல் பெற்று 2016ல் காஷ்மீர் சென்றார். சிறுவயதில் இருந்தே மிகச் சுறுசுறுப்பு.இந்தியாவின் வடகோடி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தின் பொடூரியா கிராமத்தில் பிறந்தார்.காலையிலேயே ஓடுவது,உடற்பயிற்சி ,நீச்சல் என ஒரு வீரராகவே தனது வாழ்வை தொடங்கினார்.இதுவே பின்னாளில் அவர் இராணுவத்தில் இணைவதை எளிதாக்கியது.அவரது வேகத்தை சிறுவயது நண்பர் நினைவு கூர்கிறார்.டாடா […]
Read Moreகொரானா பரவலுக்கு பிறகு உலக நாடுகளால் ஒதுக்கப்படும் நாடாக சீனா உள்ளது.இதற்கு சீனா கடுமையான விலை தர நேரிடும் என உலக நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. சீனாவின் பெரிய வர்த்தக நாடாக அமெரிக்காவும் கூட சீனாவுடனான உறவை முறிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆஸ்திரேலியா மிக கடுமையான முறையில் இதற்கான விசாரணைக்கு ஊக்குவிக்கிறது. சீனா விரும்பாத பல கேள்விகளை உலக நாடுகள் அதன் மீது கேட்கும் போது இவற்றை சமாளித்து மறக்கசெய்ய உலக நாடுகளிடம் எல்லை […]
Read Moreயூனியன் பிரதேசமான காஷ்மீரின் பாலக்கோட் செக்டாரில் இன்று பாக் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளன. பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பாலக்கோட் செக்டாரில் இந்த தாக்குதலை பாக் படைகள் தாக்குதல் நடத்தின. சிறிய ரக மோர்ட்டார்களை கொண்டு தொடர்ந்து தாக்கிய பாக் படைகளுக்கு நமது படைகள் கடுமையான பதிலடியை கொடுத்துள்ளன.
Read Moreலடாக் எல்லையில் இந்தியா-சீனா மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் சீன ஆயுதங்களை குவித்து வருகிறது. எல்லையின் குறிப்பிட்ட பல பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த சீன இராணுவ குவிப்பை ஈடுகட்டும் பொருட்டு இந்தியாவும் அதே அளவிலான துருப்புகளை அங்கே குவித்து வருகிறது. பிரச்சனை நடக்கும் இடங்களை தவிர மற்ற இடங்களிலும் இந்திய இராணுவம் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த செயல்களில் இராணுவம் இறங்கியுள்ளது. சீன எல்லைக்குள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த […]
Read Moreகொரானவை காரணம் காட்டி இந்தியாவில் இருந்து சீனர்களை சீன நாட்டு அரசாங்கம் மீட்க உள்ளதாக அந்நாட்டு துதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சிக்கியுள்ள மாணவர்கள்,சுற்றுலா சென்றவர்கள் மற்றும் பிசினஸ்மேன்களை மீட்டு சீனா அழைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 27க்குள் சீன திரும்ப விரும்புபவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் வழியாக இவர்கள் மீட்கப்படுவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.எங்கிருந்து எப்போது விமானங்கள் கிளம்பும் என்ற தகவல்கள் […]
Read More