Breaking News

Day: May 22, 2020

தொடர்ந்து சீன ராணுவ நிதி அதிகரிப்பு, இந்தியாவை விட 2.7 மடங்கு அதிகம் !!

May 22, 2020

எதிர்பார்த்தது போலவே இன்று சீன பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்பு பட்ஜெட் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த வருடமும் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இந்த ஒதுக்கீடு 177பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், இந்த வருடம் 179 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பணம் அதிகரித்தாலும், இந்த வருடம் உயர்த்தபட்ட தொகை கடந்த வருடத்தை விட குறைவு தான். சீனா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% சதவீதமும் மட்டுமே ராணுவத்திற்கு செலவிடுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வருடம் […]

Read More

அமெரிக்க கடற்படைக்கு புதிய பயிற்சி விமானம், கடற்படை தேஜாஸ் சரியாக இருக்குமா ??

May 22, 2020

அமெரிக்க கடற்படை தனது போர் விமானிகளை பயிற்றுவிக்க நீண்ட காலமாக டி45 கோஷாவ்க் எனும் பயிற்சி ஜெட் விமானத்தை பயன்படுத்தி வந்தது தற்போது அமெரிக்க கடற்படை புதிய விமானத்துக்கான தேடலை தொடங்கி உள்ளது. இதற்கான கோரிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க கடற்படை, இந்த விமானங்கள் விமானந்தாங்கி கப்பலில் தொட்டு செல்லும் திறன் கொண்டதாகவும், இரட்டை இருக்கை வசதிகள் போன்றவற்றை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறது. தற்போது போட்டியில் போயிங் மற்றும் சாப் கூட்டு தயாரிப்பான டி7ஏ, லாக்ஹீட் […]

Read More

சீனாவுடன் மோதல் போக்கு- தைவானூக்கு டோர்பிடோக்களை வழங்கும் அமெரிக்கா

May 22, 2020

சீனாவுக்கும் தைவானுக்கும் மோதல் போக்கு அதிகரித்து வரும் வேளையில் 180 மில்லியன் டாலர்களுக்கு தைவானுக்கு டோர்பிடோக்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையிலும் இந்த டோர்பிடோக்களை தைவானுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதிநவீன கனஎடை 18 MK-48 Mod6 டோர்பிடோக்களை வழங்க அனுமதி அளித்துள்ளது.தனது இராணுவத்திற்கு பலத்தையும் எதிரிகளுக்கு பயத்தையும் இது அளிக்கும் என தைவான் கூறியுள்ளது.இந்த டோர்பிடோக்கள் நீர்மூழ்கியில் வைத்து ஏவப்படக்கூடியது ஆகும். தைவான் தன்னை தானே ஆளும் ஒரு […]

Read More

ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா வீர் சக்ரா

May 22, 2020

1999 கார்கில் போரின்போது பாக் இராணுவ தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஸ்குவாட்ரன் தலைவர் அஜய் அகுஜா இந்திய இராணுவ வான் படையின் தாக்கு விமானத்தின் விமானி ஆவார். அஜய் அகுஜா ராஜஸ்தானின் உள்ள கோட்டாவில் பிறந்தார்.அவர் அங்குள்ள புகழ்வாய்ந்த புனித பால் பள்ளியில் கல்வி பயின்றார்.பின்பு அவர் தேசிய பாதுகாப்பு கழகத்தில் பட்டம் பெற்று 14 ஜூன்,1985ல் இந்திய வான் படையில் தாக்கு விமானத்தின் விமானியாக நியமிக்கப்பட்டார்.தாக்கு விமானத்தின் விமானியாக மிக்-23 மற்றும் மிக் -21 […]

Read More

ரோந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்-வீரர் உயிரிழப்பு

May 22, 2020

ரோந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் காஷ்மீர் காவல்துறை வீரர் உயிரிழந்தார். காஷ்மீர் காவல் துறை வீரர் அனூப் சிங் அவர்கள் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். புல்வாமாவின் பிரிச்சூ பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவரும் காயமடைந்தார். வீரவணக்கம்

Read More

அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சவுதி போர் விமானி அல் காய்தாவுடன் தொடர்பு !!

May 22, 2020

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமெரிக்க கடற்படையின் விமான தளமான நேவல் ஏர் ஸ்டேஷன் பென்ஸிகோலாவில் பயிற்சியில் இருந்த சவுத அரேபிய விமானப்படையின் விமானி மொஹம்மது அல்ஷம்ரானிக்கு அல் காய்தா இயக்கத்துடன் இருந்த தொடர்பு அம்பலமாகி உள்ளது. இந்த விமானியின் ஆப்பிள் ஐஃபோன்களில் இருந்த லாக்கை ஆப்பிள் நிறுவனம் எடுத்து கொடுக்காத நிலையில் எஃப்.பி.ஐ தொழில்நுட்ப வல்லுநர்கள் எடுத்த நிலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்குறிப்பிட்ட நபர் பல ஆண்டுகளாக அல் காய்தா இயக்கத்துடன் […]

Read More

அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு – பயங்கரவாத தாக்குதலா ??

May 22, 2020

நேற்று அமெரிக்க கடற்படையின் விமான தளமான நேவல் ஏர் ஸ்டேஷன் கார்பஸ் க்ரிஸ்டியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். உடனடியாக செயலில் இறங்கிய கடற்படை பாதுகாப்பு பிரிவினர், அந்த நபரை சுட்டு கொன்றனர். இதில் கடற்படை பாதுகாப்பு பிரிவை சார்ந்த மாலுமி ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் ஈடுபட்டவர் அரேபியர் என்பதை தவிர வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, இந்த நிகழ்வு […]

Read More

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அல் காய்தா பயங்கரவாதி !!

May 22, 2020

அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்க்கப்பட்ட பயங்கரவாதியை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு நாடு கடத்தி உள்ளது. இவன் அங்கு 5வருட தண்டனை காலத்தை முடித்த பின்னர் தான் நாடு கடத்தப்பட்டுள்ளான். ஹைதராபாத்தை சேர்ந்த பொறியாளரான இப்ராஹீம் ஸூபைர் மொஹம்மது அமெரிக்காவில் பணியாற்றி வந்தான் பின்னர் அங்கு குடியுரிமையும் பெற்று கொண்டான். பின்னர் அங்கிருந்து கொண்டே அல் காய்தா பயங்கரவாத இயக்கத்திற்கு பண பரிமாற்றம் செய்வதில் உதவி புரிந்துள்ளான். இவனுடன் பாகிஸ்தானை சேர்ந்த ஆசீஃப் அஹமது சலீம் மற்றும் […]

Read More