அக்சய் சின் ( தற்போது சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் இந்த பகுதி நமக்குச் சொந்தம்) பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய வீரர்கள் நுழைந்து சட்டவிரோதமாக பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன எல்லைப் பாதுகாப்பு படை தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக சீன மீடியா தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிக்கிமில் இந்திய வீரர்கள் மற்றும் சீன வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.இதில் இரு தரப்பு வீரர்களுக்குமே காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. […]
Read Moreமிக்-29கே போன்ற கடற்படை விமானங்கள் கடற்பகுதியில் பாதுகாப்பு பணியில் இல்லாவிட்டால் நாட்டின் பிற பகுதிகளில் விமானப்படையோடு இணைந்து செயல்படாம் என விமானப்படை தளபதி பதாரியா கூறியுள்ளார். ஆசியன் நியூஸ் இன்டர்நேசனல் செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை விமானப்படை தளபதி பகிர்ந்துள்ளார். வடக்கு பகுதியா அல்லது மேற்கு எல்லையிலா இந்த விமானங்கள் நிலைநிறுத்தப்படும் என கேட்கப்பட்ட கேள்விக்கு இது குறித்து ஏற்கனவே ஒருங்கிணைந்த படை தளபதி கூறிவிட்டார் எனவும் நமது இலக்கை அடைவதற்கு ஏற்ப செயல்பாடுகள் […]
Read Moreஇந்தியாவுக்கான பிரேசில் தூதர் ஆன்ட்ரே அரான்ஹோ கொர்ரியா டோ லேகோ நமது தேசிய தொலைக்காட்சியான தூதர்ஷனிற்கு அளித்த பேட்டியில் பிரேசில் நாட்டின் எம்ப்ரேர் விமான நிறுவனத்துடன் இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இணைந்து கூட்டு தயாரிப்பு பணிகளில் இறங்கினால் அதனல மனதார வரவேற்போம் என கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி முனைவர் ஆர்.கே. தியாகி அவர்கள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களுக்கு […]
Read Moreஇந்திய தரைப்படை தனது டி72 மற்றும் டி90 ரக டாங்கிகளை சரி செய்யும் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் அளிக்க உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டிலேயே இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோது பதிவு செய்திருந்தோம்.தற்போது தில்லியில் உள்ள 505ஆவது தள பணிமனையை எப்படி இயக்குவீர்கள் என கருத்து கேட்பதை தரைப்படை துவங்கி உள்ளது. இந்த 505ஆவது தள பணிமனை வருடம் ஒன்றிற்கு 70 டி72 டாங்கிகளை முற்றிலும் சரி செய்யும் திறன் கொண்டவை, இந்த நிதியாண்டில் இருந்து டி90 […]
Read Moreரஷ்யாவின் கலினின்க்ராட் நகரத்தில் அமைந்துள்ள யாந்தர் கப்பல் கட்டுமான தளம் இந்திய கடற்படைக்கான 2 தல்வார் ரக கப்பல்களை கட்டி முடித்துள்ளது, இவை நாம் ஏற்கனவே இயக்கி வரும் 6 தல்வார் ரக கப்பல்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். ரஷ்யாவில் இவை ப்ராஜெக்ட் புரேவெஸ்ட்னிக் அட்மிரல் க்ரிகோரோவிச் என்றழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு கப்பல்களின் ஹல்களுக்கு முறையே 01457,01458 என்ற எண்கள் வழங்கப்பட்டுள்ளது. யாந்தர் கப்பல் கட்டுமான தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எட்யூர்ட் எஃபிமோவ் இந்த கப்பலீகளுக்கான ஏற்றுமதி […]
Read Moreஇந்திய தரைப்படை 36 – டாங்கி நகர்வு வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த வானகங்கள் 8×8 ட்ரைவ் திறன் கொண்டதாகவும், 70டன்கள் எடை வரை சுமக்கும் திறன் கொண்டதாகவும், எதிர்கால மேம்பாடுகளுக்கான வசதிகளை உள்ளடக்கும் வகையிலும் இருத்தல் வேண்டும். கூடுதல் சிறப்பம்சங்கள்: 1)தற்காலத்தில் காணப்படும் அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் இருக்க வேண்டும். 2)70 டன்கள் எடையுடன், வகுப்பு70 ஐ.ஆர்.சி:6-2014 தரத்திலான பாலங்களை கடக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். 3) பி.எஸ்3 தரம் கொண்ட டர்போசார்ஜட் […]
Read More1962 போரில் தவாங்கின் பம் லா-வில் சீன வீரர்களைஅடித்து துவம்சம் செய்து இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருது பெற்ற சுபேதார் ஜொகிந்தர் சிங் அவர்களின் வீரவரலாறு 1962ல் இந்தியா மற்றும் சீனாவிற்கிடையே நடைபெற்ற மாபெரும் தரைப் போர் இந்தியாவிற்கு சிறப்பான போராக அமையாவிட்டாலும் நமது வீரர்கள் ஒவ்வொருவரின் திறனையும் போரில் அவர்கள் காட்டிய வீரத்தையும் மறுக்க முடியாது.அவ்வாறு பல வீரர்கள் தாங்கள் வீடு திரும்பமாட்டோம் எனத் தெரிந்திருந்தும் ” இந்தியாவிற்காக இந்த இடத்தை காப்போம்” என […]
Read Moreஏப்ரல் மற்றும் மே-ல் இரு முறை இந்திய எல்லைக்குள் சீன இராணுவ வானூர்திகள் ஊடுருவியதை அடுத்து சீன எல்லைக்கு அருகே உள்ள ட்ரைப் கின்னார்,லாஹால் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் பாதுகாப்பு கண்காணிப்பை இந்தோ திபத் காவல் படை அதிகரித்துள்ளது. ட்ரைபல் லாஹாலின் சும்டோ பகுதியிலும் மற்றும் ஸ்பிடி மாவட்டத்திலும் இரு முறை வானூர்திகள் தென்பட்டுள்ளன.இவை இரண்டு மாவட்டங்களும் சீன எல்லைக்கு அருகே உள்ளன.ஏப்ரல் 11 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய நாட்களில் வானூர்தி தென்பட்டுள்ளது.ஹிமாச்சல பிரதேசம் 260கிமீ […]
Read Moreகாஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறி பாக் மீது தாக்குதல் நடத்த அனைத்து தருணங்களையும் இந்தியா உருவாக்கி வருவதாக ஞாயிறு அன்று பாக் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா காஷ்மீரை சட்டவிரோதமாக இணைத்துள்ளதாக ட்டிட்டரில் அவர் குற்றம்சாட்டியுள்ளார். உலக கவனத்தை காஷ்மீரில் இருந்து திசை திருப்பி பாக்கிஸ்தானின் மீது தவறான கொள்கையால் தாக்குதல் நடத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இராணுவ தளபதி பாக் புதிய பயங்கரவாத இயக்கத்தை காஷ்மீரில் உருவாக்கியுள்ளது என கூறியதையும் […]
Read Moreகாஷ்மீரின் தோடா பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் ஒரு இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.இந்த என்கௌன்டரில் இரு முக்கிய ஹிஸ்புல் பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெளியான தகவல்படி மசூர் அகமது மற்றும் தாகிர் பட் என்ற இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.இதில் ஒருவன் தோடா பகுதியையும் மற்றொருவன் புல்வாமா பகுதியையும் சேர்ந்தவன் ஆவர். செனாப் சமவெளி பகுதியில் இளைஞர்களை மூலைச்சலைவை செய்யும் வேலையில் இருந்தவன் தான் தாகிர். இந்த நடவடிக்கையில் ஒரு இராணுவ வீரரும் வீரமரணம் […]
Read More