Breaking News

Day: May 12, 2020

காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகள் கைது; ஆயுதங்களை கைப்பற்றியது காவல்துறை

May 12, 2020

காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அவந்திபோரா பகுதியில் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத கட்டமைப்பை தகர்த்த காஷ்மீர் காவல்துறை நான்கு பயங்கரவாதிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து வெடிபொருள்களை கைது செய்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் பாக்கில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு புகலிடமும் சப்ளையும் அளித்து வந்துள்ளனர் என காஷ்மீர் காவல்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளது. வெடிபொருள்கள்,தோட்டாக்கள் ஆகியவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read More

சீன எல்லையோரம் இந்திய வீரர்கள் குவிப்பு – ராணுவம் மறுப்பு !!

May 12, 2020

கடந்த சில நாட்கள் முன்பு சீன படையினருடன் நமது வீரர்கள் மோதி கொண்டதை பற்றி செய்திகள் வெளியாகி இருந்தன நமது பக்கத்திலும் அதனை நாம் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் நேற்றைய தினம் முதலே வடக்கு சிக்கீம் மற்றும் கிழக்கு லடாக் பகுதிகளில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இரு பக்கமும் குவிக்கப்பட்டு உள்ளதாஙவும் மீண்டும் டோக்லாம் போன்ற சூழல் உருவாகி உள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் இன்று ஏ.என்.ஐ […]

Read More

பாகிஸ்தானை சீண்டும் இந்தியா !!

May 12, 2020

சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியில் தேர்தல் நடத்தக்கூடாது என இந்தியா எச்சரித்தது நியாபகம் இருக்கலாம். இதன் பின்னர் இந்திய ஊடகங்கள் கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிகளில் நிலவும் காலநிலை குறித்து செய்தி வெளியிட்டு பாகிஸ்தானை மேலும் வெறுப்பேற்றின. இந்த நிலையில் தற்போது லடாக் யூனியன் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கில்ஜித் பல்டிஸ்தான் லடாக் யூனியன் பிரதேச அரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதாவது இந்தியாவின் ஒரு பகுதி என […]

Read More

இன்று செவிலியர் தினம் – இந்திய இராணுவ நர்சிங் சேவைப்பிரிவு குறித்த பார்வை !!

May 12, 2020

ராணுவ நர்சிங் சேவைகள் பிரிவு முப்படைகள் மருத்துவ சேவைகள் பிரிவின் அங்கமாகும். இது சண்டை படைப்பிரிவு அல்ல ஆனால் இது முப்படைகள் இயங்க உதவும் இன்றியமையாத உதவி பிரிவாகும். 1888 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த பிரிவு முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின்கீழ் பணியாற்றியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. 1893 இல் இந்திய இராணுவ நர்சிங் சேவை என்ற பெயரில் இது குறிப்பிடப்பட்டது. இந்திய நர்சிங் சர்வீசஸ் […]

Read More

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரிகள் தற்கொலை !!

May 12, 2020

காஷ்மீரின் அனந்த்னாக் பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் காவல்படையின் 49ஆவது பட்டாலியனை சேர்ந்த துணை ஆய்வாளரான ஃபாத்தாஹ் சிங் தனக்கு கொரொனா தொற்று இருக்கமோ என அஞ்சி தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரை சேர்ந்தவர் ஆவார். தனது கடிதத்தில் கொரொனா காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் எனது உடலை யாரும் தொட வேண்டாம் எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளார்.ஆனால் மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரிகள் அவருக்கு கொரொனா […]

Read More

இந்தியா மற்றும் ஜப்பான் கூட்டு பயிற்சி தள்ளி வைப்பு !!

May 12, 2020

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்திய மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு துறை கூட்டத்தில் இருநாடுகளின் விமானப்படைகளும் இணைந்து போர் பயிற்சி மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேற்குறிப்பிட்ட போர்ப்பயிற்சி இந்த வருடம் ஜப்பானில் நடக்கவிருந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. எனினும் இரு நாடுகளும் தொடர்ந்து பாதுகாப்பு ரீதியாக நெருங்கி ஒத்துழைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.அதுவும் கடந்த இரண்டு வருடங்களில் இத்தகைய ஒத்துழைப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா […]

Read More

அமெரிக்க நீர்மூழ்கியை அதிநவீன கருவி மூலம் வீழ்த்திய இந்திய கடற்படை !!

May 12, 2020

குறிப்பிட்ட மலபார் பயிற்சி ஒன்றில் அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஸிட்டி ஆஃப் கார்பஸ் க்ரிஸ்டி எனும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலும் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் நீர்மூழ்கி கப்பலும் வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியில் ஒருவரை ஒருவர் கையில் இருக்கும் தகவல்களை வைத்து வேட்டையாடும் படி உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இரு நீர்மூழ்கிகளும் கடலடியில் பாய்ந்தன. பல மணி நேரமாக இந்திய நீர்மூழ்கியை தேடிய அமெரிக்க நீர்மூழ்கி குழுவிடம் “நீங்கள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டு விட்டீர்கள்” என தெரிவிக்கப்பட்டது. […]

Read More

கிர்கிஸ்தான், கஸகாஸ்தான் சீனாவுக்கு சொந்தம்; மத்திய ஆசிய நாடுகள் அதிருப்தி !!

May 12, 2020

சீனா பல்வேறு நாடீகளுடன் எல்லை தகராறில் ஈடுபட்டு வருகிறது தெரிந்த விஷயம் தான். ஆனால் கடந்த சில நாட்களில் புதிதாக சில பகுதிகளை சீன ஊடகங்கள் உரகமை கோர தொடங்கி உள்ளன. சமீபத்தில் நேபாள நாட்டிற்கு சொந்தமான எவரெஸ்ட் சிகரத்தை சீன அரசு ஊடகம் உரிமை கோரி பின்னர் எழுந்த எதிர்ப்புகள் காரணமாக திருத்தி கொண்டது. தற்போது அந்த வரிசையில் கஸகாஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. டுவாடியாவோ எனும் சீன ஆன்லைன் ஊடகம் ஒன்று […]

Read More

சீன ராணுவ அதிகாரியின் மூக்கை உடைத்த இளம் இந்திய ராணுவ அதிகாரி !!

May 12, 2020

சில நாட்களுக்கு முன்பு சிக்கீம் மாநிலத்தில் உள்ள நாகு லா பகுதியில் உள்ள முகுத்தாங் அருகே அத்துமீறி உள்ளே நுழைந்த சீன படையினரை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர் அப்போது கைகலப்பு ஏற்பட்டதை பதிவு செய்திருந்தோம்.தற்போது இந்த நிகழ்வு குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த அத்துமீறல் நடைபெற்ற நேரத்தில் நமது தரைப்படையின் அஸ்ஸாம் ரெஜிமென்ட்டின் வீரர்கள் சீன படையினரை தடுத்து நிறுத்தி திரும்பி செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்போது ஆவேசமடைந்த ஒரு சீன […]

Read More

இந்திய எல்லையில் சீன இராணுவ வானூர்தி- போர் விமானம் ஏவிய விமானப்படை

May 12, 2020

இந்திய சீன எல்லையில் சீன இராணுவ வானூர்தி தென்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தனது போர்விமானத்தை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக சிக்கிமின் நாகு லா பகுதியில் இந்திய இராணுவ வீரர்களும் சீன வீரர்களும் மோதிக் கொண்டனர்.இதில் சீனத்தரப்பில் ஏழு வீரர்களும் இந்திய தரப்பில் நான்கு வீரர்களும் காயமடைந்தனர். அதன் பின் லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் கற்கள் எறிந்து தாக்குதல் நடத்தினர்.லோக்கல் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் சுமுகமாக தீர்வு காணப்பட்டது. […]

Read More