
காஷ்மீரீல் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.எனவே நமது வீரர்கள் அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து தாக்க தொடங்கினர்.
ஆபரேசன் மேலஹூரா எனும் பெயரில் இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கினர்.தற்போது வரை இந்த சண்டையில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இராணுவம் கூறியுள்ளது.