Breaking News

கொரனா பாதிப்பு காரணமாக பி-8ஐ விமான டெலிவரி பாதிப்பு

  • Tamil Defense
  • April 14, 2020
  • Comments Off on கொரனா பாதிப்பு காரணமாக பி-8ஐ விமான டெலிவரி பாதிப்பு

அமெரிக்காவில் கொரானா தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கு அனைத்து மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனால் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா ஆர்டர் செய்திருந்த பி-8ஐ விமான டெலிவரியும் தாமதம் ஆகும் என தெரிகிறது.

இந்தியாவின் பெரிய கடற்பரப்பை கண்காணிக்க இந்தியா தற்போது P8I நெடுந்தூர கண்காணிப்பு விமானங்களை தான் உபயோகித்து வருகிறது.கடற்பரப்பு மட்டுமல்லாமல் பாக்,சீன எல்லைக் கண்கானிப்பிலும் பி-8ஐ அவ்வப்போது ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

தற்போது விமானத் தேவை அதிகமாக உணரப்பட்டதால் கடந்த 2016ல் மேலதிக நான்கு விமானங்கள் சுமார் 1.1 பில்லியன் டாலர்கள் செலவில் ஆர்டர் செய்யப்பட்டன.இது தவிர கடற்படை மேலும் அதிக ஆறு விமானங்கள் வாங்க உள்ளது.இதற்கு இந்திய தளவாட கொள்முதல் அமைப்பு கடந்த நவம்பரில் அனுமதி அளித்துள்ளது.

இந்த புதிய பொசைடான் விமானங்கள் வரும் ஏப்ரல் முதல் படையில் இணைக்கப்பட இருந்தது.

தற்போது தமிழகத்தின் அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் இராஜாளி தளத்தில் இருந்து தான் பொசைடான் விமானங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த விமானங்களின் பணி என்பது அளவிடமுடியாதது.

கடலோர ரோந்து,தேடுதல் மற்றும் மீட்பு, கொள்ளையர்கள் எதிர்ப்பு ,நீர்மூழ்கி எதிர்ப்பு என பல ஆபரேசன்களுக்கும் இந்த பொசைடான் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

டோகலாம் மற்றும் புல்வாமா பிரச்சனையின் போதும் இராணுவத்திற்காக எல்லையில் பறந்தன இந்த விமானங்கள்.

எதிரிகளின் நீர்மூழ்கியை கண்காணிக்க இந்த விமானங்களை கடற்படை பயன்படுத்துகிறது.பல நாடுகளுடனான பயிற்சியிலும் கலந்து கொண்டுள்ளது.10 மணிநேரம் தொடர்ந்து பறக்க கூடியது.4000கிமீ பறக்க வல்லது.