பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு !!

COVID19
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள தொழிலாளர்கள் நல மருத்துவமனை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து நடமாடும் வைராலஜி ஆய்வகத்தை உருவாக்கி உள்ளது.

நவீன தொலை தொடர்பு வசதிகள் சகிதம் உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆகியவற்றின் தரத்திற்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இது பல்வேறு ஆராய்ச்சிகளை தங்கு தடையின்றி நடத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை பி.எஸ்.எல் 2 மற்றும் பி.எஸ்.எல் 3 தரத்திலான ஆய்வகங்களாகும் மேலும் ஒரு நாளைக்கு 1000சாம்பிள்களை ஆய்வு செய்யும் திறன் கொண்டது இதன் முலம் கொரோனா தடுப்பு பணிகளில் கணிசமான அளவில் வெற்றி கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.