இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தற்போது பிரம்மாஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை சுமார் 600கிமீ தொலைவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளன.
இந்தியா தற்போது ஏவுகணை தொழில்நுட்ப கட்டுபாட்டு அமைப்பில் இணைந்துள்ள காரணத்தால் பிரம்மாஸின் எல்லையை பன்மடங்கு அதிகரிக்க முடியும்.
இந்த 600கிமீ தாக்குதல் வரம்புள்ள ஏவுகணை வான் நீர் நிலம் என மூன்று டைமன்ஷன்களிலும் பயன்படுத்த கூடியதாக இருக்கும்.
ஆகவே இந்த புதிய ஏவுகணை பாகிஸ்தானுக்கு பெரிய ஆபத்தாக விளங்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.