பயங்கரவாதிகளை வேகமாக ஒழித்து வரும் இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • April 3, 2020
  • Comments Off on பயங்கரவாதிகளை வேகமாக ஒழித்து வரும் இந்திய தரைப்படை !!

ஜம்மு காஷ்மீரில் இந்திய தரைப்படை இந்த வருடத்தில் இந்த நாள் வரை 28பயங்கரவாதிகளை ஒழித்துள்ளது. பல பயங்கரவாதிகள் காஷ்மீரை விட்டு வெளியேறி உள்ளனர் மேலும் பல முக்கியமான பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் அடிப்படையில் பயங்கரவாதத்தை ஒழித்து கட்ட தரைப்படை மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இது குறித்து காஷ்மீர் பகுதி காவல்துறை ஐஜி விஜய் குமார் கூறும்போது, பாதுகாப்பு படைகள் பயங்கரவாத குழுக்களுக்காக வேலை செய்த 65 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 28பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், கூடுதலாக 11பயங்கரவாதிகள கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களில் 8பேர் புதிதாக பயங்கரவாத குழுக்களில் இணைந்தவர்கள் ஆவர், மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அவர்கள் 8பேரும் அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

காவல்துறை வட்டாரங்களின் தகவல்கள் படி சுமார் 220பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.