
காஷ்மீரீல் உள்ள சோபோர் பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர்.அவர்களை சுற்றிவளைத்துள்ள பாதுகாப்பு படைகள் தற்போது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன.
இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர்.ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் இருப்பிடம் தெரிந்தமையால் தற்போது அந்த பகுதி முழுதும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் அன்று இரவு இந்த ஆபரேசன் தொடங்கியுள்ளது.சோபோரின் குலாபாஹ் பகுதியில் இந்த என்கௌன்டர் நடைபெற்று வருகிறது.பயங்கரவாதிகள் வெளியேறாத வண்ணம் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் இணைய சேவையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கைந்து நாட்களில் இது மூன்றாவது என்கௌன்டர் ஆகும்.