தற்போது நிலவி வரும் கொரோனா பிரச்சினை இந்திய ரஷ்ய எஸ்400 ஒப்பந்தத்தை பாதிக்காது ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பாலா வெங்கடெஷ் வர்மா டாஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும் கூறுகையில் சிறிய மாற்றங்கள் வேண்டுமானால் நடக்கலாம் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஃபெப்ரவரியில் ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் சேவைகள் நிறுவனத்தின் துணைத்தலைவர் விளாடிமிர் ட்ராஸ்ஸோவ் இந்தியாவுக்கான முதல் எஸ்400 அமைப்பு 2021 ஆண்டின் இறுதியில் ஒப்படைக்கப்படும் எனவும் ஐந்து அமைப்புகளும் 2025ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே ஒப்படைக்கப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.