12 மணி நேரத்தில் ஏழு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • April 27, 2020
  • Comments Off on 12 மணி நேரத்தில் ஏழு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

காஷ்மீரின் குல்கமில் நேற்று நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டிருந்த வேளையில் இன்று மேலும் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குல்கம் என்னுமிடத்தில் பயங்கரவாதிகளின் இருப்பு குறித்த தகவல் இராணுவத்தை அடைந்தது.

ஆபரேசனை தொடங்க முடிவு செய்த இராணுவம் ஆபரேசன் அஸ்தலை தொடங்கியது.

பயங்கரவாதிகள் இருக்கும் பகுதியில் படைகளை ஒருங்கிணைத்து அந்த பகுதிகளை முற்றுகை இட்டது.ெ

என்கௌன்டர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.நேற்று மட்டும் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்று மேலும் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.இதன் மூலம் கடந்த 12 மணி நேரத்தில் ஏழு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

சிஆர்பிஎப்,19வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,காஷ்மீர் எஸ்ஓஜி படைகள் இந்த ஆபரேசனை நடத்தி வருகின்றனர்.