இந்திய கடற்படையின் (ஐ.என்) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கிகப்பலான விக்ராந்த் வரும் 2021 ஆம் ஆண்டில் படையில் இணையும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் ரஷ்யாவிலீ தயாரிக்கப்பட்ட 10 காமோவ் கா -31 ‘ஹெலிக்ஸ்’ வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு (ஏ.இ.யூ & சி) உலங்கு வானூர்திகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
மார்ச் 20 ம் தேதி ஜேன்ஸிடம் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, கா -31 இறக்குமதியை “உடனடியாக” முடிக்க இந்திய கடற்படை விரும்புகிறது, இது பாதுகாப்பு அமைச்சினால் (MoD) 2019 மே மாதம் அங்கீகரிக்கப்பட்டது, இதற்கு 36 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 10 AEW & C இயங்குதளங்களில் நான்கு வரை 37,750 டன் எடை கொண்ட விக்ராந்தில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 க்குள் ரஷ்ய தயாரிப்பான மிக் -29 கே / கே.யு.பி ‘ஃபல்க்ரம்’ போர் விமானங்கள் மற்றும் இதர விமானங்களை கொண்டு விக்ராந்த் தனது முழு விமான வான் படையணியையும் களமிறக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.