COVID19 – ஆபரேஷன் நமஸ்தே !! களம் காணும் இந்திய ராணுவம் !!

இந்திய ராணுவம் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கியது.

தில்லியில் தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே இதனை தொடங்கி வைத்த பின்னர் அளித்த பேட்டியில் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டது போல தற்போதும் ராணுவம் சிறப்பாக செயல்படும் என்றார். மேலும் ராணுவ பணியின் தன்மை காரணமாக SOCIAL DISTANCINGஐ கடைபிடிக்க முடியாத சூழல் உள்ளது ஆகவே அதற்கு மாற்றாக வேறு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்,
எனது வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது நாட்டை காக்க முடியும் என்றார்.

எல்லையோரம் பணியமர்த்தப்பட்டுள்ள வீரர்கள் விடுமுறைகள் ரத்து மற்றும் தங்களது குடும்பங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை எனவும் அவர்கள் அருகிலுள்ள ராணுவ பகுதிகளுக்கு தேவையானால் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் இது ஒய்வுப்பெற்ற ராணுவத்தினர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறினார்.

கடந்த 2001-2 காலகட்டத்தில் ஆபரேஷன் பராக்கரம் காரணமாக சுமார் 8மாதங்கள் வரை ராணுவ வீரர்கள் விடுமுறைக்கு செல்லமுடியாத சூழல் நிலவியதையும் தற்போது அத்தகயை சூழல் நிலவுவதாகவும் நாட்டிற்கும் அரசிற்கும் தற்போது உதவ வேண்டியது நமது கடமை என்றும் அவர் கூறினார்.

நாடு முழுக்க பல்வேறு மருத்துவ மையங்களை அமைத்துள்ள ராணுவம், கட்டளையகங்கள் வாரியாக உதவிக்கான எண்களை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.