Breaking News

கொரோனா வைரஸுக்கு தீர்வு கண்டுபிடிக்க பாதுகாப்பு மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களுக்கு மத்திய அரசு உத்தரவு !!

  • Tamil Defense
  • March 24, 2020
  • Comments Off on கொரோனா வைரஸுக்கு தீர்வு கண்டுபிடிக்க பாதுகாப்பு மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களுக்கு மத்திய அரசு உத்தரவு !!

கோவிட் -19 வைரஸ் பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான தேசத்தின் கூட்டு முயற்சியில் இணையுமாறு பாதுகாப்பு மற்றும் அணு ஆராய்ச்சி ஆய்வகங்களை அரசாங்கம் கேட்டுள்ளது.

மேலும் நாட்டின் உயிரி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் எந்தவொரு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை தளங்களிலிருந்தும் மருத்துவ மாதிரிகளை வாங்கி ஆராய்ச்சி செய்ய பணிக்கப்பட்டுள்ளன.

இது குறித்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் விஞ்ஞான சமூகத்திற்கு அவர்களின் ஆய்வின் தாக்கத்தை அதிகரிக்க திறந்த வடிவத்தில் பகிரப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சனிக்கிழமை கோவிட் -19 சிறப்பு நடவடிக்கை குழு நடைபெற்ற
முதல் கூட்டத்தில்
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் பால் மற்றும் அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் ஆகியோர் இந்த முடிவை எடுத்தனர்.

இந்த ஆய்வகங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ICMR) வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளது. மேலும் புனேவை தளமாகக் கொண்டு செயல்படும் தேசிய வைராலஜி நிறுவனம் ஏற்கனவே வைரஸின் மரபணுவை வரிசைப்படுத்தியுள்ளது – அவ்வாறு செய்த ஐந்தாவது நாடு இந்தியா ஆகும், இது சோதனைகள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சிகளுக்கு மிகவும் அவசியம் ஆகும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கும் ஆராய்ச்சிக்கு நெறிமுறை ஒப்புதல் கிடைத்தவுடன் மாதிரிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.