இத்தாலியில் தத்தளித்த 263 இந்தியர்களை மீட்டது ஏர் இந்தியா- மருத்துவ கூடங்களுக்கு அனுப்பி வைப்பு

  • Tamil Defense
  • March 23, 2020
  • Comments Off on இத்தாலியில் தத்தளித்த 263 இந்தியர்களை மீட்டது ஏர் இந்தியா- மருத்துவ கூடங்களுக்கு அனுப்பி வைப்பு

இத்தாலியில் கொரானா கோரத்தாண்டவம் ஆடி வரும் உச்சகட்ட நிலையில் ஏர் இந்தியா விமானம் 263 இந்தியர்களோடு டெல்லி திரும்பியுள்ளது.மீட்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் மாணவர்கள் ஆவர்.

மீட்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தோ திபத் எல்லை படையால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கேரண்டைன் முகாமிற்கு அழைத்து செய்யப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியாவின் AI 1122 விமானம் ரோமில் 9.16 am தரையிறங்கியது.அதன் பிறகு 263 இந்தியர்களை அழைத்து டெல்லி திரும்பியுள்ளது.

விமான பணியார்களின் பாதுகாப்பிற்கு ஹஸ்மத் சூட்கள் வழங்கப்பட்டன.