லான்ஸ் நாய்க் ஓம் பிரகாஷ்

சேவை எண் : 13769974W

பிறப்பு : மே 2, 1983

இடம் : சிகல்,ஹிமாச்சல்

சேவை : இராணுவம்

தரம் : லான்ஸ் நாய்க்

பிரிவு : 9 பாரா (SF)

ரெஜிமென்ட்: பாராசூட் ரெஜிமென்ட்

விருது :சௌரிய சக்ரா

வீரமரணம் : பிப் 21, 2016

லான்ஸ் நாய்க் ஓம் பிரகாஷ் அவர்கள் ஹிமாச்சலின் சிகல் என்ற இடத்தில் மே 2 1983ல் பிறந்தார்.2003 ல் இராணுவத்தில் இணைந்தார்.

பாம்போர் தாக்குதல்: பிப்ரவரி 2016

2016ம் வருடம் கேப்டனின் படைப்பிரிவு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் தினசரி அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.அதே போல தான்அன்றும் 9வது பாரா படை அனுப்பப்பட்டிருந்தது.

பாம்போர் பகுதியில் தேடுதல் வேட்டையில் இருந்து திரும்பி கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதில் 11 வீரர்கள் படுகாயமடைந்தனர்.தாக்கிய பயங்கரவாதிகள் அருகே இருந்த அரசு கட்டிடத்தில் புகுந்து கொண்டனர்.காவல் துறை மற்றும் பாதுகாப்பு படைகள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதவற்கு முன்பே அரசு ஊழியர்கள் ,மாணவர்கள் உட்பட 100 பேரை மீட்டது.பயங்கரவாதிகளை ஒழிக்க 9வது சிறப்பு படை வரவழைக்கப்பட்டது.

லா/நா  ஓம் பிரகாஷ் 5வது பட்டாலியன் ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் ரெஜிமென்டில் இணைந்தார்.அதன் பின் பாரா பயிற்சியை வெற்றிகரமாக முடித்து 9வது பட்டாலியன் பாரா கமாண்டோ படையில் இணைந்தார்.

2016ல் பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியில் அரசு கட்டிடத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.இதை முறியடிக்க 9வது பாரா படை களமிறக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் வீரமுடன் செயல்பட்ட லா/நா ஓம் பிரகாஷ் தனது உயிரையும் பொருட்படுத்தாது முன் பாய்ந்து ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினார்.இதில் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளான லா/நா ஓம் பிரகாஷ் குண்டடி பட்டு வீரமரணம் அடைந்தார்.அவரது ஈடு இணையற்ற தியாகத்தின் காரணமாக 2016 ஆகஸ்டு மாதம் அவருக்கு சௌரிய சக்ரா ( வீரமரணத்திற்கு பின்) வழங்கப்பட்டது.
 
அவருக்கு கிருஷ்ணா தேவி என்ற மனைவியும் சிம்ரன் மற்றும் முஷ்கன் என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

வீரவணக்கம்