Day: February 13, 2020

பஞ்சாப் வழியாக ஆயுதங்களை கடத்தும் பாகிஸ்தான்; இராணுவத்தை உதவிக்கு அழைக்கும் பஞ்சாப்

February 13, 2020

காஷ்மீர் வழியாக இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதலை பாக் நடத்தி வருவதற்கு, Financial Action Task Force (FATF) எனப்படும் அமைப்பு பாகிஸ்தானுக்கு பயங்கர அழுத்தம் கொடுத்து வருகிறது.இதனால் பாக் குழுக்கள் பஞ்சாப் வழியாக தற்போது ஆயுதங்களை கடத்தி வருகின்றன. 2019 புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீருக்குள் அனுப்பப்படும் பல ஆயுதங்கள் பஞ்சாபில் பிடிபட்டுள்ளன.சீன ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவின் பஞ்சாபிற்குள் ஆயுதங்களை போடுவது அதிகரித்துள்ளது.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல் இது அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் […]

Read More

ஒப்பந்தம் தாமதம்,நீண்ட கால பரிசீலனை , நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படும் இந்திய படைகள் நவீனப்படுத்தும் திட்டம்

February 13, 2020

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 250 பில்லியன் டாலர்கள் இந்திய இராணுவப் படைகளின் நவீனப்படுத்தும் திட்டத்திற்காக உலக நாடுகள் இந்தியாவிற்கு தங்கள் நவீன தளவாடங்களை விற்க வரிசையாக நிற்கும் நேரத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் ஏற்படும் நேரவிரயம் மற்றும் பணப்பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்காக போக்குவரத்து விமானங்கள் வாங்க போடப்பட்ட 1.7 பில்லியன் டாலர்கள் அளவிலான ஒப்பந்தத்தை ஏர்பஸ் நிறுவனம் கடந்த 2015ல் வென்றது.1962க்கு பிறகு ஒரு தென்னாசிய நாட்டுக்கு தனது தளவாடத்தை ஏர்பஸ் […]

Read More

கடத்தல் எதிர்ப்பு பயிற்சி-தங்கள் திறமையை வெளிப்படுத்திய மரைன் கமாண்டோ வீரர்கள்

February 13, 2020

பிப்ரவரி 12 அன்று விசாகப்பட்டிணத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகா தளத்தில் கடத்தல் எதிர்ப்பு/தடுப்பு தொடர்பான பயிற்சி நடைபெற்றது.இதில் பல படைப்பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். கடற்படையின் சிறப்பு படையான மரைன் கமாண்டோ வீரர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படைப்பிரிவு மற்றும் மாநில படை வீரர்கள் இணைந்து இந்த கடத்தல் எதிர்ப்பு போர்பயிற்சியை மேற்கொண்டனர். கடத்தல் எனும் போது படைகள் முழுதும் இணைந்து ஒற்றுமையாக திட்டமிட்டு அதை தடுக்கவோ அல்லது நிறுத்தவோ செய்வது குறித்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.அதாவது […]

Read More

இரஷ்யாவை விட்டு விலகும் இந்தியா ! ட்ரம்ப் வருகையில் 3.5பில்லியன் டாலர் தளவாட ஒப்பந்தம் கையெழுத்து

February 13, 2020

அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் அவர்களின் இந்திய வருகையை ஒட்டி இரு பெரிய இராணுவ தளவாட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.3.5 பில்லியன் டாலர்கள் அல்லது 25000 கோடி அளவில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இரஷ்யாவிடம் இருந்து ஆயுதக் கொள்முதலை இந்தியா பெருமளவு குறைத்துள்ளது.2007 முதலே கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து தளவாடங்கள் பெற்றுள்ளது.தற்போது 24 எம்எச்-60 ரோமியோ பலபணி வானூர்திகள் 2.6 பில்லியன் டாலர்கள் செலவிலும்,இராணுவத்திற்காக 930 மில்லியன் […]

Read More

ஆஹா….!! F-15EX விமானத்தை இந்தியாவிற்கு வழங்க அனுமதி வேண்டும்-அமெரிக்காவிற்கு போயிங் நிறுவனம் வேண்டுகோள்

February 13, 2020

இந்தியா தனது விமானப்படைக்கு விமானங்கள் வாங்க நீண்ட காலமாக போராடி வருகிறது.இதற்காக பல நிறுவனங்கள் தங்களது விமானங்களை இந்தியாவிற்கு தர போட்டியில் உள்ளனர்.அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தனது F/A-18E/F விமானத்தை ஏற்கனவே போட்டிக்கு அனுப்பியுள்ள நிலையில் தற்போது தனது நவீன F-15EX விமானத்தையும் இந்தியாவிற்கு அளிக்க அனுமதி வேண்டி அமெரிக்க அரசை நாடியுள்ளது போயிங் நிறுவனம். இந்தியா தனது விமானப்படைக்காக 110 விமானங்கள் வாங்க உள்ள நிலையில் தற்போதள இந்த முடிவை போயிங் நிறுவனம் எடுத்துள்ளது. இந்த […]

Read More