சீனா எல்லையில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்: புதிய இராணுவ தளபதி நரவனே

சீனா எல்லையில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்: புதிய இராணுவ தளபதி நரவனே

நமது படைப்பிரிவுகள் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றன.நாம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என புதிய இராணுவ தளபதி நரவனே கூறியுள்ளார்.

நாம் கடந்த காலங்கள் முதல் மேற்கு எல்லையில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளோம்.அதை போலவே தற்போது சமமான முறையில் சீன எல்லையிலும் கவனம் செலுத்துவது அவசியம் என பேசியுள்ளார்.

சீனா-இந்தியா இடையே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது.அமைதியை தொடர்ந்து  பேணி வருவது மூலம் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என அவர் பேசியுள்ளார்.

படையை எந்நேரத்திலும் போருக்கு தயார் நிலையில் வைத்திருப்பதும் படைகளை நவீனப்படுத்துவதும் என்னுடைய தலைமையின் கீழ் உறுதிப்படுத்துவேன் என அவர் கூறியுள்ளார்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தளபதி பதிவு செய்துள்ளார்.

தளபதி நரவனே அவர்கள் இராணுவத்தின் 28வது தளபதியாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.