
ட்ரால் என்கௌன்டர்; இரு முக்கிய பயங்கரவாதிகளை வீழ்த்தியது இராணுவம்
காஷ்மீரின் ட்ரால் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் மூன்று முக்கிய ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது.
இதில் முக்கிய கமாண்டரான காரி யாசிர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியது.புர்கான் சேக் என்ற தற்கொலை பயங்கரவாதியும் மாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதில் காரி யாசிர் என்பவன் பாகிஸ்தானை சேர்ந்தவன்.கடந்த வருடம் இரு குஜ்ஜார் மக்களை கொன்ற வழக்கில் தொடர்புடையவன் இவன்.
தற்போது இரு பயங்கரவாதிகளை இராணுவம் வீழ்த்தியுள்ளது.பயங்கரவாதிகள் அடையாளம் இன்னும் காணப்படவில்லை.
சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.