Breaking News

சியாச்சின் வீரர்களுக்கு ஒரு லட்சம் அளவிலான பாதுகாப்பு பொருட்கள் வழங்க திட்டம்

சியாச்சின் வீரர்களுக்கு ஒரு லட்சம் அளவிலான பாதுகாப்பு பொருட்கள் வழங்க திட்டம்

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் பணிபுரியும் வீரர்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான personal kit வழங்கப்பட உள்ளது.குளிரில் இருந்து வீரர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த personal kit உடன் கிட்டத்தட்ட 1.5 லட்சம் மதிப்பிலான ஆயுதங்களும் வழங்கப்படும்.இந்த தளவாடங்கள் மற்றும் personal kit ஆகியவற்றை தளபதி நரவனே அவர்களே நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.

குளிரில் இருந்து பாதுகாக்கும் தளவாடங்கள் வழங்கப்பட்ட பிறகு சியாச்சினில் பணிபுரியும் வீரர்களுக்கு தேவையெனும் பட்சத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட உள்ளது.

வீரர்களுக்கான பலஅடுக்கு உடை ஒன்று மட்டுமே Rs 28,000 ரூ ஆகும்.இத்துடன் சிறப்பு தூங்கும் பேக்  Rs 13,000 ஆகும். down jacket மற்றும் சிறப்பு கை உறை Rs 14,000 ஆகும்.தவிர காலுறை Rs 12,500 ஆகும்.

இதுதவிர 50000ரூ மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கப்படும்.சியாச்சினில் பணிபுரியும் வீரர்களுக்கு இது மிக அத்தியாவசியமான ஒன்று ஆகும்.

பனிச்சரிவில் சிக்கும் வீரர்களை கண்டறிய 8000ரூ மதிப்பிலான ஆயுதம் வழங்கப்படும்.

சியாச்சினில் 17000 அடி உயரம் முதல் 22,000அடி உயரம் என வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.