5100 கோடிகள் செலவில் இராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்க ஒப்புதல்
5100 கோடிகள் செலவில் இராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளித்தது இராணுவ கொள்முதல் அமைப்பு.
இந்த தளவாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் கடற்படைக்காக புதிய ஆறு கன்வென்சனல் நீர்மூழ்கி கட்டும் திட்டத்திற்கும் அனுமதி அளித்துள்ளது.
இராணுவ அமைச்சர் மற்றும் சிடிஎஸ் ராவத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இராணுவ கொள்முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள மின்னனு போர்முறை அமைப்பு பெறவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.