12 நாள் போதும்; பாக்கை மிரட்டிய பிரதமர் மோடி

12 நாள் போதும்; பாக்கை மிரட்டிய  பிரதமர் மோடி

நமது படைகளுக்கு பாகிஸ்தானை வீழ்த்த 10 முதல் 12 நாட்களுக்கு மேல் ஆகாது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.நமது அண்டை நாடு நம்முடன் மூன்று முறை மோதி தோற்றுள்ளது எனவும் அவர்கூறியுள்ளார்.

ஆனால் இந்தியாவின் மீது பாகிஸ்தான் பல தலைமுறைகளாக மறைமுக போர் தொடுத்து வந்துள்ளது.இதன் மூலம் பல மக்கள் மற்றும் வீரர்களின் உயிர்கள் பறிபோகியுள்ளன எனவும் கூறியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு விமானம் கூட படையில் இணைக்கப்படவில்லை என பேசிய அவர் தற்போது நவீன விமானங்கள் வாங்கப்பட்டு வருவதாக பேசினார்.

முன்பெல்லாம் இராணுவம் தாக்குதல் நடத்த அனுமதி கேட்ட போது மறுக்கப்பட்டன ஆனால் தற்போது இளைமையான யோசனைகள் மூலம் சர்ஜிகல் தாக்குதல்,வான்வெளிதாக்குதல் என பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்கப்படுகின்றன என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.